states

கலவரத்தை உருவாக்க முயற்சி: காங். எம்எல்ஏ குற்றச்சாட்டு

சென்னை,ஏப்.20- ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில்  பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்றக்குழு தலைவர் கு.செல்வப் பெருந்தகை,“ஆளுநர் கார் மீது எந்த தாக்குதலும் நடக்கவில்லை என்று ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி மற்றும் காவல்துறை டிஜிபியும் தெரிவித்த நிலையி லும் ஒரு அமைப்பு கலவரத்தை ஏற்படுத்த  முயற்சிக்கிறது. தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைத்து மதக் கலவரத்தை உருவாக்க சதி திட்டம் தீட்டப்படுகிறது. அத்தகைய அமைப்பு, இயக்கத்தினரை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவேண்டும்” என்றார். வெளிநடப்பு-வெளியேற்றம் அதிமுக தரப்பில் பேசிய எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ஆளுநர் விவகாரம் குறித்து ஏற்கெனவே விடுத்த அறிக்கையை சட்டப்பேரவையில் வாசித்து முடித்ததும் அக்கட்சி எம்எல்ஏக் கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது பேரவை வளாகத்திற்குள் (லாபியில்) அரசுக்கு எதிராக கோஷமிட்டு அவை நிகழ்ச்சிகளுக்கு குந்தகம் ஏற்படுத்தினர். இது தவறான நடைமுறை என்பதால் பேர வைத் தலைவர் மு.அப்பாவு பல முறை எச்சரித்தும் பலனில்லை. இதனால், அனை வரையும் வெளியேற்ற சபைக் காவலர்க ளுக்கு உத்தரவிட்டார். இதேபோல், பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.