states

லாரி-பேருந்து மோதல்; ஏழு பேர் பலி

ஹுப்ளி, மே 24- கர்நாடகாவின் கோலாப் பூரில் இருந்து பெங்களூர்  நோக்கி பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. செவ்வாய்க்கிழமை அதி காலை ஒரு மணியளவில் டிராக்டர் ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, தார்வாத் நோக்கி சென்று கொண்டிருந்த எதிரே வந்த லாரி ஒன்றின் மீது  மோதியது. இந்த விபத்தில்  ஓட்டுநர்கள் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்துவிட்டனர். 26 பேர் காயமடைந்தனர்.  அவர்கள் ஹுப்ளி நகரில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர். இவர்களில் ஐந்து பேர் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தனர். இத னால் மொத்த உயிரிழப்பு ஏழு ஆக அதிகரித்துள்ளது. 

;