மதுரை, ஜூலை 1- அடையாள அரசியலை முன்னிறுத்தும் பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவை பழங்குடியினரின் பிரதி நிதியாக பார்க்க முடியாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார். மேலவளவு போராளிகள் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் ஜூன் 30 வியாழ னன்று மதுரை கோ.புதூர் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன். எம்.பி., தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்கள் அலங்கை செல்வரசு, வி.பி.இன்குலாப், ப.கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராம லிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மு.வீரபாண்டி யன், மக்கள் கண்காணிப்பகம் ஒருங்கிணைப்பா ளர் ஹென்றி திபேன், எவிடன்ஸ் கதிர், அ.தி.ம.மு.க தலைவர் பசும்பொன் பாண்டியன் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.
அடையாள அரசியல்
பொதுக்கூட்டத்தில் தொல். திருமாவள வன் பேசியதாவது: குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டி யிடும் திரளபதி முர்மு “அடையாள” அரசியலை முன்னிறுத்துகிறார். எனவே அவரை நாங்கள் ஆதரிக்கவில்லை. திரௌபதி முர்முவை பட்டியல் பழங்குடி யினரின் பிரதிநிதியாகப் பார்க்க முடியாது. அவர் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளார். காட்டுப் புலிகளும் சர்க்கஸ் புலிகளும் ஒன்றல்ல. காட்டு யானைகளும் கோவில் யானைகளும் ஒன்றல்ல. முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் ராம்நாத் கோவிந்த் முறையே முஸ்லிம் சமூகம் மற்றும் பட்டியல் சாதியினரை பிரதிநிதித்துவப்படுத்த வில்லை. இந்தியக் குடியரசுத் தலைவராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் உள்ளார். அவர் பொறுப்பிலிருந்தாலும் நாட்டில் கௌரவக் கொலைகள் குறையவில்லை. அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தார். அவர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த முஸ்லிம்தான். ஆனால், அவர் பொறுப்பிலிருந்த காலத்திலும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் குறைய வில்லை. திரௌபதி முர்மு ஏற்கனவே உள்ளாட்சி பிரதி நிதியாக இருந்துள்ளார். அமைச்சர் பொறுப்பை யும் வகித்துள்ளார். அவர் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பும் கூட அவரது கிராமத்திற்கு மின் வசதி இல்லை. இப் போது வழங்கப்போவதாகக் கூறுகிறார்கள். மற்றொருபுறத்தில் எங்களது அணியின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டுள்ளார். அவர் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டால், மாநிலங்களில் ஆளுநர் பொறுப்பை வகிப்ப வர்கள் தங்களது பதவியை தவறாகப் பயன் படுத்தி மாநில அரசுகளுடன் விளையாடுவதை அனுமதிக்கமாட்டார் என்ற உறுதியை அளிக்கிறோம்.
ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) ஒரு ஆபத்தான அமைப்பாகும், அது “ஒரே இந்தியா, ஒரே கலாச்சாரம்” என்கிறது. 2024-ஆம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் பாஜக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், அது அனைவருக்கும் சமத்துவத்தை உறுதி செய்யும் இந்திய அரசியலமைப்பை மாற்றி மனுஸ்மிரு தியைக் கொண்டு வரும், இது இந்தியாவை 2 ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்லும். மோடி - அமித்ஷா கொள்கைகள் அனைத்தும் ஹிட்லரின் கொள்கையை போன் றது. ஹிட்லர் ஜெர்மனியில் யூத மக்களை எப்படி கொன்று குவித்தாரோ அதேபோல்தான் ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல் பிற மதத்தை சேர்ந்த வர்களை அழித்தொழிக்க நினைக்கின்றது. அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதில் பாஜக வெற்றி பெற்றால், சமூக நீதி, இடஒதுக்கீடு, பெண்களுக்கான கல்வி கேள்விக்குறியாகும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
மனுவின் மர்மப் புன்னகை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் பேசியதாவது: மேலவளவு முருகேசன் உள்ளிட்ட ஏழு பேர் கொலை செய்யப்பட்டனர். இதில் முருகே சனின் தலை தனியாகக் கிடந்தது. அப்போது “தலை இருந்தால் தானே தலைவன்” என சிலர் கொக்கரித்தனர். அன்று வீழ்த்தப்பட்டது ஒரு தலை தான். இன்று தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும், சமூக நீதியை நிலை நாட்டவும் ஆயிரக்கணக்கான தலைகள் களத்தில் நிற்கின்றன.
மேலவளவு படுகொலை நிகழ்ந்தவுடன் முதலில் களத்திற்குச் சென்றவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா. தீண்டாமைக் கொடுமை அகல நிலச் சீர்திருத்தம் வேண்டுமென முழங்கினார். தீண்டாமைக்கு எதிராக அப்போதைய முதல்வர் கலைஞரை மதுரை மாநாடு நடத்த வித்திட்டவர் என்.சங்கரய்யா. இன்றைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக தொடர்ந்து உறுதியுடன் களத்தில் நிற்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் படத்தை சட்டம்போட்டு நீதிமன்றங்க ளில் மாட்டிவைத்துவிட்டு. நீதிமன்ற வாசலில் மனு மர்மப் புன்னகை செய்து கொண்டி ருக்கிறான். மனு, சட்டத்தை சாதுர்யமாக பின்னோக்கி இழுக்கிறது. அரசியல் களத்தில் தேவை சாதுர்யம். மாறி வரும் அரசியல் சூழலில் எந்த ஒரு பிரச்சனையிலும் தேவை சாதுர்யமான முடிவு தான்.
சனாதனத்திற்கும் ஜனநாயகத்திற்கும் போட்டி
குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவை ஏன் ஆதரிக்க மறுக்கிறீர்கள். அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்தானே என சிலர் கேள்வியெழுப்புகின்றனர். இது அல்ல. சனாதனவாதிகளுக்கும், ஜனநாயகத்தை நேசிப்பவர்களுக்கும் இடையிலான போட்டி. திரௌபதி முர்மு-வின் கிராமத்திற்கு மின்விளக்கு வசதியில்லை. இந்தியா ஒளிரும் லட்சணம் இதுதான். சனாதன பயங்கரவாதம் நாட்டிற்கு ஆபத்தானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குமான உறவு தேர்தல் உறவல்ல. அது வர்க்க உணர்வு. சாதி என்ற சல்லி வேர்களை அறுத்தெறியும் வரை ஓய மாட்டோம். கருப்பு-சிவப்பு-நீலம் மூன்றும் இணைந்து சனாதனத்தையும் சாதியக் கொடு மைகளையும் முறியடிக்கும். இவ்வாறு மதுக்கூர் ராமலிங்கம் பேசினார். பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் த.செல்லக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.