சென்னை,மே 11- அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப பணியா ளர்களுக்கு 3 ஆண்டுக ளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போட ப்படும். 13வது ஒப்பந்தம் 2020 இல் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து 14வது ஒப்பந்தம் போடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக போக் குவரத்து தொழிலாளர்க ளுக்கு ஊதிய ஒப்பந்தம் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் இடைக் கால நிவாரண நிதியாக ரூ.1000 அதிமுக அரசு வழங்கியது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, போக்குவரத்து அமைச்சரான ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தொழிற் சங்க பிரதிநிதிகளுடன் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தினார். தொழிற்சங்கங் கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப் பட்டன. 30 விழுக்காடு ஊதிய உயர்வு, அலவன்ஸ், ஓய்வூதியதாரர்களுக்கான நிலுவை தொகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஆனாலும் ஒப்பந்தம் ஏற்படவில்லை. இந்த நிலையில், சட்டப்பேரவையின் நடப்பு கூட்டத்தொடரில் ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங் கர், தொழிற்சங்க பிரதி நிதிக ளுடன் மே 12 அன்று பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று அறிவித்தார். இதனையடுத்து, 14 வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை போக்கு வரத்து துறை அமைச்சர் எஸ். எஸ்.சிவசங்கர் தலைமை யில் சென்னை குரோம் பேட்டையில் மே 12 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. பேச்சு வார்த்தையில் இதில் பங்கேற்க 66 தொழிற் சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது. சிஐடியு, தொமுச, அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியுசி, ஐஎன்டியுசி, பாட்டாளி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட சங்கங்களுக்கு கூட்டத்தில் பங்கேற்க கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சங்கத்தில் இருந்து 2 பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து துறை செயலாளர் கோபால், மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் அன்பு ஆபிரகாம், விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.