சென்னை,ஏப்.9- சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில், வரலாறு காணா வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஏழை குடும்பங்கள் சொல்ல முடியாத துன்பத்திற்கு தள்ளப்பட் டுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் இணைப்பு சக்கரங்கள் பொறுத்தப்பட்ட வாகனங்களுக்கு கூடுதல் பெட்ரோல் செலவாகும் நிலையில், தற்போதைய விலை உயர்வினால் மட்டும் மாதம் ஒன்றுக்கு, மாற்றுத்திறனாளி ஒவ்வொரு வருக்கும் சராசரியாக ரூ.1500 வரை கூடுதல் செலவு ஆவதாக கணக்கிடப்படு கிறது. இதனால், தங்களது அத்தியாவ சிய பணிகளுக்குக்கூட வாகனத்தை பயன்படுத்த முடியாமல் மாற்றுத்திறனாளி கள் தவிக்கின்றனர். எனவே, இந்த விலை உயர்வுக்குக் காரணமான ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட விலைகளை திரும்பப்பெற வலியுறுத்தி ஏப். 11 அன்று மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதாக சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, பொதுச் செயலார் நம்புராஜன் ஆகியோர் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.