கொச்சி, ஜூன் 11- ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள எச்ஆர்டிஎஸ் என்கிற நிறுவனத்தின் முக்கிய செயல்பாடு பழைய இரும்பு வியாபாரம். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழைய இரும்பு விற்பனைக்கு இடைத்தரகராக எச்ஆர்டிஎஸ் செயல்படுகிறது. இதை தெரிவித்துள்ள எர்ணாகுளத்தைச் சேர்ந்த சிபி திலீப் நாயர் என்பவர், அந்த அமைப்பின் நிதிப் பரிமாற்றங்கள் குறித்து விசாரிக்க காவல் துறையிலும், புலனாய்வு துறையிலும் அளித்துள்ள புகாரில் கேட்டுக்கொண்டுள்ளார். வெளிநாட்டு தொண்டு நிறுவ னங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய் யப்பட்ட ஒரு அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) என்கிற அடையாளத்தின் கீழ் இந்த சட்டவிரோத வர்த்தகம் மேற் கொள்ளப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் சவூதி அரேபியாவில் இருந்து 60 லட்சம் டன் பழைய இரும்பு ரயில் தண்டவா ளங்களை விற்பனை செய்ததில் எச்ஆர் டிஎஸ் இடைத்தரகராக செயல்பட்டதாக வும் புகாரில் கூறப்பட்டுள்ளது. புகாருக்கு ஆதாரமாக எச்ஆர்டிஎஸ் நிறுவன செயலாளரான அஜி கிருஷ்ணன், ரயில் தண்டவாளங்களை சஞ்சய் மேனன் என்பவரிடம் வழங்கு மாறு எழுதியுள்ள கடிதமும் இணைக் கப்பட்டுள்ளது.
முன்னதாகவே 60 லட்சம் டன் பழைய ரயில் தண்டவா ளங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வர்த்தகம் மட்டுமின்றி, வெளிநாடு களில் இருந்து வரியில்லா நன்கொடை களையும் இந்நிறுவனம் பெறுகிறது. பழைய இரும்பு வர்த்தகத்தில் முதலீடு செய்த பலர் இந்நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டுள்ளனர். பொருளை ஒப்படைக்காமலே இடைத்தரகர்களாக செயல்பட்டு கமிஷன் வாங்கியதாகவும் புகார் எழுந்துள்ளது. தொண்டு நிறு வனம் என்ற போர்வையில் இந்த மோசடி நடந்துள்ளதாகவும் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சொப்னா சுரேஷ், இந்நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறையின் சிஎஸ்ஆர் பிரிவின் இயக்குநராக உள்ளார். துணைத் தலைவராக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிர்வாகி கே.ஜி.வேணு கோபால் உள்ளார்.