வேலையின்மை மேலும் தீவிரம்
புதுதில்லி, ஜன.1- 2023-ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று வெளியான இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி இந்தியாவின் வேலையின்மை விகிதம் மேலும் தீவிரம் அடைந்துள் ளது. நவம்பர் மாதம் 8 சத வீதமாக இருந்த வேலை யின்மை, டிசம்பரில் 8.30 சதவீதமாக அதிகரித்துள் ளது. கடந்த 16 மாதங்களோடு ஒப்பிட்டால் இது மிக மிக அதிகமாகும். நகர்ப்புற வேலை யின்மை விகிதம் 8.96 சதவீதத் திலிருந்து டிசம்பரில் 10.09 சதவீதமாக அதிகரித்துள் ளது. குறிப்பாக ஹரியானா வில் 37.4 சதவீதமாகவும், இராஜஸ்தானில் 28.5 சதவீத மாகவும் தில்லியில் 20.8 சத வீதமாகவும் வேலை யின்மை அதிகரித்துள்ளது.
பண மதிப்புநீக்க மனுக்கள் : இன்று தீர்ப்பு
புதுதில்லி, ஜன.1- ஒன்றிய அரசின் பண மதிப்பு நீக்கத்திற்கு எதி ரான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு திங்களன்று தீர்ப்பு வழங்க உள்ளது. குளிர்கால விடுமுறைக்குப் பின்னர் திங் களன்று உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளின் விசா ரணை மீண்டும் தொடங்க உள்ளது. இந்நிலையில் டிசம்பர் 7-ஆம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற உத்தர வுக்கு எதிரான வழக்கில் விசாரணை நிறைவு பெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
ரிஷப் பண்ட்டுக்கு மேல் சிகிச்சை
புதுதில்லி, ஜன.1- கார் விபத்தில் படுகாயம் அடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் தில்லி அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ரிஷப் பண்ட்டின் கார் தில்லி டேராடூன் நெடுஞ்சாலையில் படுவேகமாக சென்று சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்கு உள்ளானது. பேருந்து நடத்துநர், ஓட்டுநரால் மீட்கப் பட்ட ரிஷப் பண்ட் டேராடூன் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலை யில், அவரது உடல்நிலை யில் முன்னேற்றம் ஏற்பட்டுள் ளதால், மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் தில்லி அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹரியானா அமைச்சர் ராஜினாமா
புதுதில்லி, ஜன.1- பாலியல் குற்றச்சாட்டு புகாருக்கு உள்ளான ஹரி யானா விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் தனது பதவியை ராஜினாமா செய் தார். இந்திய ஹாக்கி அணி யின் கேப்டனாக செயல்பட்டு, பின்னர் அரசியலுக்குள் நுழைந்த சந்தீப்சிங் மீது தட கள பெண் பயிற்சியாளர் பாலியல் புகார் தெரிவித்த தைத் தொடர்ந்து சிறப்பு விசா ரணைக் குழுவை அமைத்து ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உத்தரவிட்டார். இந்நிலை யில், தனது நற்பெயரை களங் கப்படுத்துவதற்காகவே இப்புகார் தெரிவிக்கப் பட்டுள்ளதாக சந்தீப்சிங் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
சிலிண்டர் விலை உயர்வு
புதுதில்லி, ஜன.1- பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு புத்தாண்டு அன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை ரூ.25 அதிகரித்துள்ளது. புத்தாண்டு அன்று விலையை உயர்த்தி வர்த்தகர்களை வஞ்சித்துள்ளது. வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
காபூல் ராணுவ விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு
காபூல், ஜன.1- ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், ராணுவ விமான நிலையம் வெளியே நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் ஏராளமானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 3 தினங்களுக்கு முன் தலூக்கன் (Taluqan) நகரிலுள்ள அரசு அலுவலகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப் பட்டிருந்த நிலையில் இன்று காலை ராணுவ விமானநிலையத் தின் வெளியே குண்டு வெடிப்பு நடந்துள்ளது. உயிரிழப்பு கள் நேர்ந்துள்ளதை அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் உறுதிசெய்துள்ளது.
45 அதிகாரிகள் பணியிடமாற்றம்
சென்னை, ஜன.1- 45 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பிரவீன் குமார் அபிநபு, மதுரை மாநகர காவல் ஆணையராக நரேந்திரன் நாயர், திருச்சி மாநகர காவல் ஆணையராக சத்தியபிரியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பெரம்பலூர் மாவட்ட எஸ்.பியாக சியாமளா தேவி, கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பியாக மோகன்ராஜ், விருதுநகர் மாவட்ட எஸ்.பியாக ஸ்ரீநிவாசபெருமாள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்டுள்ள 45 ஐபிஎஸ் அதிகாரிகளில் 27 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
சென்னை, ஜன.1- அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலை ப்படி 34 சதவிகிதத்திலிருந்து 38 சதவிகிதமாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் மூலம் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பயன்பெறு வார்கள். மேலும் சம வேலை; சம ஊதியம் என்ற கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தி போராடிவரும் ஆசிரியர் களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்து ரைகளை அளிப்பதற்காக, நிதித்துறை செயலாளர்-செல வினம் தலைமையில், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செய லாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
முதலியார்குப்பம் படகு குழாமை மேம்படுத்த திட்டம்
செங்கல்பட்டு, ஜன. 1- முதலியார்குப்பம் படகு குழாமினை மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் க. ராமச் சந்திரன், சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப்நந்தூரி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டுக்குதான் அதிக அளவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் விரும்பி வருகை தருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அதிக அளவில் வெளிநாட்டு மற்றும் உள் நாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்து உள்ள தால், ஆண்டு தோறும் வருகை தரும் பயணி களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவில் நீங்காத அனுபவத்தை தரும் வகையில், படகு குழாம்களான முட்டுக்காடு, முதலியார் குப்பம், ஊட்டி, பைக்காரா, கொடைக்கா னல், ஏற்காடு, பிச்சாவரம், கோவை மாவட் டம் வாலாங்குளம் மற்றும் குற்றாலம் ஆகிய 9 இடங்களில் செயல்படுத்தி வருகின்றது. முதலியார்குப்பம் மிகவும் இயற்கையான சூழலில் அமையப் பெற்றது. பறவைகளைப் பார்வையிடுவோர்களின் சொர்க்கமாகவும் மற்றும் சுற்றுலாப் பயணிகள் புத்துணர்வு பெறும் தலமாகவும் விளங்குகிறது. ஓடியூர் ஏரியை ஒட்டியுள்ள வண்ணமயமான கடற் கரை தீவிற்கு எந்திர படகு மூலம் சென்று வர ஏற்பாடு செய்து தரப்படுகின்றது. இந்த படகு குழாமின் சிறப்பம்சமாகும். படகில் பயணிக்கும் போது புலம்பெயர் பறவைகளை கண்டுகளித்தும் படகு குழாம் உணவகத்தில் சுவையான கடல் உணவு களை உண்டு மகிழலாம். நீர் விளையாட்டு வசதிகள் கொண்ட முதலியார்குப்பம் படகு குழாமில் விசைப்படகு, மிதிப்படகு, ஓரி ருக்கை படகு, வாழைப் பழ வடிவிலான படகு, வாட்டர் ஸ்கூட்டர், எந்திர படகு, அதிக வேக ஜெட்ஸ்கி போன்ற படகுகள் உள்ளன. மேலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை யை அதிகரிக்கும் வண்ணம், சுற்றுச் சூழ லுக்கு உகந்த நீர் விளையாட்டுகள் அமைக் கப்பட்டு முதலியார்குப்பம் படகு குழா மானது தனித்துவமான பொழுது போக்கு தலமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. முத லியார்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணி களின் வசதிக்காக ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள் ளப்பட உள்ளன என்றார்.
இடை நிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்
சென்னை, ஜன.1- சமவேலைக்கு சமஊதியம் கோரி சென்னை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் கடந்த ஒரு மாதத்திற் கும் மேலாக போராட்டம் நடத்தி வந்த இடை நிலைபள்ளி ஆசிரியர்கள் ஞாயிறன்று (ஜன.1) மாலை தங்களுடைய போராட் டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர். இவர்களது கோரிக்கை குறித்து அரசு உயர் அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து அவர்கள் தரும் பரிந்துரை அடிப்ப டையில் முடிவெடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிய ளித்ததை அடுத்து போராட்டத்தை முடித்துக் கொள்வதாக இடை நிலை ஆசிரியர்கள் அறி வித்துள்ளனர்.
ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,49,507 கோடி
புதுதில்லி, ஜன.1- 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) வருவாய் ரூ.1,49,507 கோடி. இதில் சிஜிஎஸ்டி (ஒன்றிய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி) ரூ.26,711 கோடி. எஸ்ஜிஎஸ்டி (மாநில அரசின் சரக்கு மற்றும் சேவை வரி) ரூ.33,357 கோடி. ஐஜிஎஸ்டி (மாநிலங்க ளுக்கு இடையில் நடைபெறும் விற்பனை யின் மூலம் வரும் வருவாய்) ரூ.78,434 கோடி. செஸ் வரி ரூ.11,005 கோடி. (வரி மீதான வரி) மூலம் கிடைத்துள்ளது தமிழகத்தைப் பொறுத்தமட்டில் 2021-ஆம் ஆண்டு ஜிஎஸ்டி மூலம் தமிழ்நாடு ரூ.6,635 கோடிஈட்டியிருந்தது. 2022-ஆம் ஆண்டு ரூ.8,324 கோடியை ஈட்டியுள்ளது. இது 25 சதவீதம் அதிகமாகும்.
தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் ஊடுருவல்!
சென்னை, ஜன. 1- தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பு நிறுவனமான TNDIPR டிவிட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப் பட்டது. தமிழ்நாடு அரசின் செய்தி தொடர்புத் துறை வெளியிடும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் செய்தி அறிக்கைகள் ஆகியவை @TNDIPRNEWS ட்விட்டர் பக்கத்தில் வெளி யாகும். இந்நிலையில் சனிக்கிழமை இரவு 1:30 மணியளவில் இந்த அக்கவுண்ட்டில் ஊடுருவல் செய்யப்பட்டுள்ளது. இதில் கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்கள் பதிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில் பக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கச்சா எண்ணெய் விலை குறைந்தும், பெட்ரோல் விலை ஏன் குறையவில்லை
கே.எஸ். அழகிரி கேள்வி
சிதம்பரம், ஜன. 1- உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும், பெட்ரோல் விலை ஏன் குறையவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராகுல்காந்தியின் நடை பயணம் அரசியல் அதிகாரம் பெறுவதற் காக அல்ல, நாட்டின் பிரச்னைகளை தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காக. மக்கள் சாதி மதத்தின் பெயரால் பிரிந்து விடக் கூடாது மொழி ஆதிக்கத்தில் சிக்குண்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த நடை பயணத்தை தொடங்கியுள்ளார். தற்போது கச்சா எண்ணெய் விலை 70 அமெரிக்க டாலர் தான். ஆனால் பெட்ரோல் விலை ரூ.100. இதற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பினார். இதுவரை பிரதமர் நரேந்திரமோடி பதில் தெரிவிக்கவில்லை. அதேபோல் எரிவாயு உருளை விலை தற்போது ரூ.1200. இதற்கான காரணத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் சொல்ல முடியவில்லை. பண மதிப்பு இழப்பு நட வடிக்கை கொண்டு வந்தார்கள். இதனால் மக்களுக்கும், அரசுக்கும் என்ன பலன் கிடைத் தது. காஷ்மீரில் மக்களின் உரிமைகளை நாங்கள் பாதுகாத்தோம். இன்றைக்கு அந்த மாநிலத்தை மூன்றாக உடைத்து விட்டார் கள். ஒரு மாநிலங்களாக இருந்த அந்த பகுதி மூன்று மாநிலங்களாக உடைக்கப் பட்டுள்ளது. அதற்காக காஷ்மீருக்கு கிடைத்த லாபம் என்ன? எனவே, மோடியின் ஆட்சி முழுமை யாக தோல்வியை சந்தித்துள்ளது. நாட்டு மக்களை அதிலிருந்து மீட்க வேண்டும் என்பதற்காக ராகுல்காந்தி இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
அந்நிய செலாவணி இருப்பு குறைவு: திவால் நிலையில் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத், ஜன.1- திவால் நிலைக்கு உள்ளாகும் அள வுக்கு பாகிஸ்தானின் அந்நிய செலா வணி கையிருப்பு குறைந்துள்ளது. கடந்த வாரம் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு 5.8 பில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் ரூ.47,560 கோடி) குறைந்தது. இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஆகும். அந்நிய செலாவணி கை யிருப்புக் குறைந்துள்ள நிலையில், வெளிநாடுகளிலிருந்து பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு பாகிஸ்தான் உள்ளாகி இருக்கிறது. கடந்த வியாழக்கிழமை மட்டும் 294 மில்லியன் டாலர் (ரூ.2,410 கோடி) அளவில் அந்நிய செலாவணி இருப்பு குறைந்தது.தற்போதைய இருப்பைக் கொண்டு வெளிநாடுகள் மற்றும் ஐஎம்எஃப் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமிருந்து பெற்ற கடனை பாகிஸ்தானால் திருப்பிச் செலுத்த முடியாது. இதனால், இலங்கை போன்று மோசமான பொருளாதாரச் சூழல் விரைவில் பாகிஸ்தானில் ஏற் படக்கூடும் நிபுணர்கள் எச்சரித்துள்ள னர்.