சென்னை, ஜூலை 15- சிபிஎம் முதுபெரும் தலைவர் சங் கரய்யா அவர்களுக்கு மதுரை காம ராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என்று தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித் துள்ளார். இதுதொடர்பான அரசின் செய்திக்குறிப்பு: சுதந்திரப் போராட்டத் தியாகியும் மிகச் சிறந்த பொதுவுடமைத் தலை வராகவும் திகழும் நம் மரியாதைக் குரிய சங்கரய்யா அவர்களுக்கு தமிழ் நாடு அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘‘தகைசால் தமிழர்’’ என்ற விரு தினை வழங்கி கௌரவித்தது. இன்று (ஜூலை 15) 102 வது பிறந்த நாள் காணும் பெரியவர் சங்கரய்யா அவர்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரி யில் பயின்ற பொழுது ஆங்கிலே யர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடு பட்டதால் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் காரணமாக அவர் கல்லூரித் தேர்வினை எழுத முடியவில்லை. இந் தியா விடுதலை பெறுவதற்கு 12 மணி நேரங்களுக்கு முன்பாக தான் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி யன்று அவர் விடுதலை செய்யப்பட்டார் என்பது வரலாறு. ஏழை, எளிய மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்தவரும் தமி ழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்த வரும் ஒரு மிகச் சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியுமான சங்கரய்யா அவர்களுக்குச் சிறப்பு சேர்க்கும் வகை யில், அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. அதன் அடிப்படை யில், மரியாதைக்குரிய சங்கரய்யா அவர்களுக்கு மதுரை காமராசர் பல்க லைக்கழகத்தின் சார்பாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஆவன செய்யப்படும் என்று தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித் துள்ளார். தமிழக முதல்வரின் இந்த அறி விப்புக்கு சிபிஎம் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் நன்றி தெரி வித்துள்ளார்.