- டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும். தேர்வு முடிவு குறித்து பர வும் வதந்திகளை நம்ப வேண்டாம் என டிஎன்பி எஸ்சி தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி வேண்டு கோள் விடுத்துள்ளார்.
- நியூசிலாந்து நாட்டில் மையம் கொண்டுள்ள “கேப்ரியல்” சூறாவளி கடுமையான காற்றுடன் வடக்கு தீவின் பெரும் பகுதியை புரட்டியெடு த்தது. மேலும் ஹாக்ஸ் விரிகுடா பகுதி கனமழையால் வெள்ளக் காடாக காட்சி அளித்து வரும்நிலையில், நாட்டில் அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்துவதாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்ஹிப்கின்ஸ் அறிவித்துள்ளார்.
- பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரத்தின் உச்சத்தை அடைந்துவிட் டார். பிரதமர் மோடி அவர்களே மறந்துவிடா தீர்கள், ஹிட்லரின் சர் வாதிகாரமும் ஒருநாள் முடிவுக்கு வந்தது என பிபிசி அலுவலகங்களில் வருமான வரி சோத னைக்கு ஆம் ஆத்மி கட்சி யின் சஞ்சய் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
- குஜராத்தின் பருச் நகரில் நடைபெற்ற திருமண நிகழ்வில் தேசியகீதத் தை அவமதித்ததாக பாஜகவுடன் தொடர்பு டைய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
- காசிபேட் (தெலுங்கா னா) - பல்ஹர்ஷா (மகா ராஷ்டிரா) இடையே இன்டர்லாக் பணி நடந்து வருவதால் பிப்ரவரி 15- 24-ஆம் தேதி வரை மகா ராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்கள் இடையே 13 ரயில்கள் ரத்து செய்யப் படுவதாக தென் மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
- பழம்பெரும் பாலிவுட் நடிகர் ஜாவேத் கான் (60) மூச்சுத் திணறலால் அவ திப்பட்டு கடந்த ஒரு வரு டமாக படுத்த படுக்கை யாக இருந்த நிலையில் செவ்வாயன்று காலமானார்.
உலகச் செய்திகள்
- கொலம்பிய அரசிற்கும், அந்நாட்டின் தேசிய விடுதலைப் படைக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மெக்சிகோ வில் மீண்டும் தொடங்குகிறது. அரசுத்தரப்பில் பேச்சுவார்த்தைக்குச் செல்லும் குழுவினரை கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்தவோ பெட்ரோ சந்தித்துப் பேசினார். எவ்வளவு விரைவில் போர் நிறுத்தத்திற்கான சம்மதத்தைப் பெற முடியுமோ, அவ்வளவு விரைவில் அதைப் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
- உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா மேலும் முன்னேற்றம் கண்டுள்ளது. ரஷ்யாவின் தாக்குதல்கள் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள உக்ரைன், “ரஷ்யத்தரப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டன. மின்சார அமைப்புகள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளதால் பல பகுதிகளில் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டிருக் கிறது. ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள கார்கிவ் பகுதியில் மிகவும் கடினமான சூழல் நிலவுகிறது” என்று தெரிவித்துள்ளது.
- அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணப் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. அந்த பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்திற்குள் துப்பாக்கி ஏந்தி வந்த ஒருவர் சுட்டதில் இவர்கள் கொல்லப்பட்டார்கள். மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ள னர். துப்பாக்கியால் சுட்ட அந்த நபரும் உயிரிழந்துள்ளார். அவர் தன்னைத்தானே சுட்டு இறந்திருக்க வேண்டும் என்று காவல்துறை யினர் தங்கள் விசாரணைக்குப் பிறகு தெரிவித்துள்ளார்கள்.