states

போடி அருகே ஆற்றில் மூழ்கி புதுமணத் தம்பதி உள்பட 3 பேர் பலி

தேனி, அக்.16-      போடி அருகே மலைப் பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கி புதுமணத் தம்பதி உள்பட 3 பேர் பலியாகினர். தேனி மாவட்டம், போடி சுப்புராஜ்  நகர் புதுக்காலனியை சேர்ந்தவர் தியாக ராஜன் மகன் சஞ்சய்குமார் (24). இவர்  லண்டனில் மென்பொருள் பொறியாள ராக பணியாற்றி வந்தார். தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு போடிக்கு வந்துள்ளார். இவரது உறவினர் தேனி பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் அழகு ராஜா (30) . இவர் கோவையில் மருந்து  பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். இவருக்கும் கோவையை சேர்ந்த காவியா (20) என்பவருக்கும் ஒரு மாதத்திற்கு முன்புதான்  திருமணம் நடைபெற்றது.       இந்நிலையில் அக்டோபர் 15 சனிக்கிழமையன்று திருமண விருந் திற்காக போடிக்கு வந்த அழகுராஜா-காவியா தம்பதியினர் சஞ்சய்குமார் வீட்டில் தங்கியுள்ளனர். ஞாயிறன்று காலையில்  சஞ்சய்குமார்,  அழகு ராஜா, காவியா மற்றும் சஞ்சய்குமா ரின் சித்தி மகன் பிரணவ் (12) ஆகி யோர் போடி சிறைக்காடு மலை கிராமத்தை அடுத்துள்ள பெரியாற்றுக் கோம்பை பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றனர். போடி பகுதியில் தற்போது  கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஆற்றில் பதினெ ட்டாம்படி கேணி என்ற இடத்தில் குளிப்ப தற்காக இறங்கிய சஞ்சய்குமாரை  நீர்ச்சுழல் இழுத்துள்ளது. அவரை காப்பாற்ற முயன்ற அழகுராஜா,  காவியாவும் சுழலில் சிக்கினர். பாறைக் கல்லை பிடித்தபடி காப்பாற்ற முயன்ற சிறுவன் பிரணவ் மட்டும் தப்பினார். அடுத்தடுத்து மூன்று பேரும் சுழலில் சிக்கி நீரில் மூழ்கினர். பிரணவ் தனது உறவினருக்கும் போடி குரங்கணி காவல் துறைக்கும், போடி தீயணைப்பு நிலையத்திற்கும் செல்போன் மூலம் தகவல் தெரி வித்துள்ளார்.  சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் 3 பேரின் உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக  தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.