states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

பாரிஸ், ஜூலை 18- ஐரோப்பிய நாடுகளில் உருவாகியுள்ள வெப்பத்தின் உக்கிரம் பல நாடுகளில் ஆயிரக்க ணக்கான மக்களைத் தங்கள் பகுதிகளில் இருந்து வேறு இடங்களுக்கு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ளது. பிரான்ஸ், போர்ச்சுக்கல், ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் பெரும் காட்டுத்தீ பரவி யிருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் ஆயிரக்க ணக்கான ஹெக்டேர் நிலங்கள் தீக்கிரையாகி யுள்ளன. ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது இந்தக் கோடைக் காலத்தில் ஏற்பட்டுள்ள இரண்டாவது வெப்ப அலையாகும். சுற்றுச்சூழல் மாற்றங்கள்தான் இதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.  பிரான்சில் மட்டும் 24 ஆயிரத்து 700 ஏக்கர் நிலங்கள் தீக்கிரையாகியுள்ளன. ஆயிரக்க ணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 386 என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

தடுத்து நிறுத்துங்கள்!

நியூயார்க், ஜூலை 18- கரீபிய நாடுகளில் ஒன்றான ஹைதி நாட்டில் உள்ள வன்முறைக் கும்பல்களுக்கு ஆயுதங்கள் கிடைக்காதவாறு செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. ஹைதியில், குறிப்பாக அதன் தலை நகரான போர்ட் பிரின்சில் வன்முறை தலை விரித்தாடி வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் 12க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கி றார்கள். இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் விவாதித்தது. மனித உரிமைகளை மீறுபவர்கள் மீதும், குற்றவாளிக் கும்பல்கள் மீதும் கடுமையான தடைகளை விதிக்கப்போவதாக எச்சரித்துள் ளது. அந்நாட்டில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் குழு மேலும் ஒரு ஆண்டுக்குத் தனது பணியைக் கவனிக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதற்கான தீர்மானத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்த சீனா, வன்முறைக் கும்பல்களை எச்சரித்ததோடு விட்டதற்குக் கடும் எதிர்ப்பைக் காட்டியது. உடனடியாக ஆயு தங்கள் கிடைப்பதைத் தடை செய்யும் ஆணை யைப் பிறப்பித்திருக்க வேண்டும் என்று கூட்டத்தில் பேசிய சீனப் பிரதிநிதி தெரிவித்தார்.

செர்பியாவில் இருந்து வங்கதேசத்திற்கு ஆயு தங்களைக் கொண்டு சென்று கொண்டிருந்த உக்ரைனிய சரக்கு விமானம் கிரீஸ் நாட்டில் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விமானத்தில் பயணித்த எட்டு பேரும் உயிரிழந்து விட்ட னர். விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் இருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் கள். ஒரு இயந்திரம் பழுதடைந் ததுதான் விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

தங்கள் நாட்டின் பாதுகாப்பு க்கு எதிரான எந்தவொரு நட வடிக்கைக்கும் சரியான பதிலடி கிடைக்கும் என்று ஈரானின் வெளிநாட்டு உறவுகளுக்கான குழுத்தலைவர் கமல் கர்ராஸி தெரிவித்துள்ளார். இஸ்ரேலு டன் பல நாடுகள் தங்கள் உறவை உருவாக்கிக் கொள்ளும் நிலையில்தான் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். அண்டை நாடுகளில் இருந்து எங்களின் பாதுகாப்பைத் தாக்கும் நோக்கத் திற்கு கடுமையான பதிலடி யைத் தருவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தென் கொரியாவில் அடுத்த கொரோனா அலை  வீசி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக 40 ஆயிரம் தொற்றுகள் என்று பரவிக் கொண்டிருக்கின்றன. புதிய பி.ஏ.5 ஒமைக்ரான் வகை மூன்றில் ஒரு பங்கு தொற்றாக இருக்கிறது. தடுப்பூசிகள் தொற்று வருவதைத் தடுக்கா மல் போகலாம், ஆனால் இறப்பைத் தடுக்கக் கூடியவை என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இருந்தா லும், தடுப்பூசி போட்டவர்களும் கூட முகக் கவசத்தை அணிய வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.