சென்னை,பிப்.27- தமிழ்நாடு காவல்துறை தலைவர் கள் (டிஜிபி) சைலேந்திர பாபுவை விடு தலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்தார். அப்போது அவர் பாஜகமீது புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்பினர் வெறுப் புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசி வருகிறார். அதுதொடர்பாகவும் புகார் அளித்தேன். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க பாஜகவினர் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். திருவள்ளுவர், பெரி யார் சிலைகளுக்கு காவி உடை அணி விப்பது, அம்பேத்கர் சிலைக்கு காவி உடை அணிவித்து விபூதி பூசியது போன்ற செயல்களிலும் அவர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார் கள். சமூகநீதி பயணம் மேற் கொண்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி யின் வாகனத்தை மறித்து திட்டமிட்டு வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மேலும் அந்த வகையிலான சம்பவங்கள் நடை பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டி யது காலத்தின் கட்டாயமாகும். ஆரணியில் ஏற்பட்ட ஒரு பிரச் சனைக்கு காரணமாக தனிப்படைகள் அமைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கிராமம் கிராமமாக வேட்டையாடி கைது செய்துள்ளனர். இதேபோன்று திட்டமிட்டு வன்முறையை பரப்பும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிப்பட்ட விமர்சனங்களுடன் ஆபாசமாகவும் பாஜகவினர் பேசி வரு கிறார்கள். எனவே அந்த கட்சியினரின் சதி திட்டத்தை முறியடிக்கும் வகை யில் காவல்துறையினர் செயல்பட வேண்டும். வட மாநிலங்களில் இது போன்ற அவதூறு பிரச்சாரங்கள் மூலமாக அவர்கள் ஆதாயம் தேடியதை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.