states

மதுரை மாநகராட்சி அலட்சியம் பாதாளச் சாக்கடைப் பணியில் ஈடுபட்ட தொழிலாளி பலி

மதுரை, நவ.7- மதுரை மாநகராட்சியின் அலட்சியம், கண்டுகொள்ளாத போக்கால் பாதாளச் சாக் கடை அமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழி லாளி  ஒருவர் பலியானார். அவரோடு பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். மதுரை மாநகராட்சியில் பாதாளச் சாக்கடை அமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன. தொழிலாளர்களின் உயிர்ப் பாதுகாப்பு, பணி யின் போது உயிர்காக்கும் கவசங்கள் அணிந்தி ருக்கிறார்களா என்பதை மாநகராட்சி நிர்வாகம்  உறுதிப்படுத்தாததாலும், பணி இடத்தில் மாந கராட்சி அதிகாரிகள் இல்லாததாலும் ஒரு உயிர் அநியாயமாகப் பறிபோனது. மாநகராட்சி இரண்டாவது வார்டு கூடல்நகர் அருகே உள்ள அசோக்நகர் இரண்டாவது தெரு வில் பாதாளச்சாக்கடை பணி சனிக்கிழமை தொடங்கி நடைபெற்றுள்ளது.

(மழைக்காலத் தில் 15 அடி ஆழமுள்ள, மோசமான மண்ணின் தன்மை கொண்ட பகுதிகளில் பணிகளை  மழைக்காலத்திற்குப் பின்னர் தான் தொடங்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது)  திங்கள்கிழமை காலை கோயம்புத்தூரைச் சேர்ந்த மோகன்குமார், மதுரையைச் சேர்ந்த  ஸ்டாலின், ஈரோடு மாவட்டம் சத்தியமங்க லத்தைச் சேர்ந்த ஆர்.சக்திவேல் (36) மற்றும் வட இந்திய புலம்பெயர் தொழிலாளி ஒரு வர் என நான்கு பேர் பணியில் ஈடுபட்டுள்ள னர். 15 அடி உயரத்திற்கு கட்டப்பட்டுள்ள தொட்டியில் ஓட்டைபோட்டு பைப்பை இணைக்  கும் பணியில் சக்திவேல் ஈடுபட்டுள்ளார். காலை 10.35 மணியளவில்  தொட்டிக்குள் ஓட்டைபோட்டுக்கொண்டிருந்த சக்திவேல் மீது  மண் சரிந்துள்ளது. துளையிடும் இயந்திரத்தின் அதிர்வால் குழியின் அருகே சென்று கொண்டி ருந்த காவிரி கூட்டுக்குடிநீர் திட்டக்குழாயும் வெடித்தது. அதனால் குழியில் வேகமாக நிரம்  பிய தண்ணீரின் அளவு உயர்ந்தது. இதனால்  மண் சரிவில் விழுந்த மண் சகதியிலும் நீரிலும் சக்திவேல் சிக்கிக் கொண்டார். இதையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக் கப்பட்டது. மண்ணில் புதையுண்ட சக்தி வேலை மதுரை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரி வினோத் தலைமையில் வந்த 15 வீரர்கள் ஐந்து மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்டனர். உயிரிழந்த சக்தி வேலுக்கு ஜெகதா என்ற மனைவியும் ஒரு மக னும் மகளும் உள்ளனர்

எச்சரித்த மாமன்ற உறுப்பினர்-மக்கள்

சனிக்கிழமை பணி தொடங்கியபோது மாமன்ற உறுப்பினர் அமுதா மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட பலர் ஒப்பந்ததாரரிடம் இப்போது பணியை மேற்கொள்ள வேண்டாம்.  மழைக்காலம் முடிந்தவுடன் தொடங்குங்கள், குண்டும் குழியுமாகும் சாலைகளால் மக்க ளுக்கு நாங்கள் பதில் சொல்ல முடியவில்லை என கூறியிருக்கின்றனர். இதையும் மீறி இப் பணி நடைபெற்றுள்ளது. சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மாநகர் மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜீத் சிங் ஆகி யோர்  சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

சு.வெங்கடேசன்

தகவலறிந்து விரைந்து வந்த மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்கடேசன், துணை மேயர் தி.நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாமன்ற உறுப்பினர் டி.குமர வேல், செல்லூர் பகுதிக்குழுச் செயலாளர் கோட்டைசாமி. மேற்கு ஒன்றியக்குழு உறுப்பி னர் ஆர்.சரஸ்வதி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு துயர நிகழ்விற்கான கார ணங்களை சக்திவேலுவை காப்பாற்றப் போராடிய மோகன்குமாரிடம் கேட்டறிந்தனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்க ளவை உறுப்பினர் சு.வெங்கடேசன், பாது காப்பு விதிகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? மண்  சரிவதைத் தடுக்க மரக்கட்டை தடுப்புகள் வைக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்கத் தவறியதால் தான் இந்த உயிர்ப்பலி நடந்துள்  ளது. எதிர்காலத்தில் இப்படி எந்த ஒரு உயி ரும் பலியாகிவிடக்கூடாது. தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென்றார்.  மாமன்ற உறுப்பினரின் குற்றச்சாட்டு குறித்து மாநகராட்சி ஆணையரிடம் கேட்ட தற்கு, விசாரித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அரசு தரப்பில் இழப்பீடு வழங்கப்படுமா? எனக் கேட்டதற்கு அதற்கான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். மீட்புப்பணிகள் முடிந்து புறப்பட்ட ஆணை யரை அப்பகுதி மக்கள் சூழ்ந்து கொண்டு பாதா ளச்சாக்கடை பணியின் துயரங்கள், மோசமான சாலைகள் குறித்து புகார் தெரிவித்தனர்.