states

கோட்சேவைக் கொண்டாடினாலும் தலைவர்களை சபர்மதிக்குத்தானே அழைத்துச் செல்ல முடிகிறது!

மும்பை, ஏப். 23 - “கோட்சேவைக் கொண்டாடினாலும், இந்தியா வந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை சபர்மதி காந்தி ஆசிரமத்திற்குத் தானே உங்களால் அழைத்துச் செல்ல முடிகிறது..!” என்று சிவசேனா, ஒன்றிய பாஜக அரசைப் பார்த்துக் கேள்வி எழுப்பியுள்ளது. நீங்கள், சர்தார் வல்லபாய் படேல், கோட்சே என யாரைத் தூக்கிப் பிடித்தாலும், உலக அரங்கில் மகாத்மா காந்தி-தான்  இந்தி யாவின் அடையாளமாக இருக்கிறார் என் பதை பாஜக-வினர் உணர்ந்து கொள்ளுங் கள் என்றும் சிவசேனா குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக, சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ ஏடான ‘சாம்னா’ தலை யங்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது: பாஜக-வின் சித்தாந்தம் நாதுராம் கோட்சேவை ஆதரிக்கிறது. ஆனால் வெளி நாட்டுத் தலைவர்கள் வந்தால் உடனே அவர்களை மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்குத்தான் அழைத்துச் செல்கிறது.

உலகத் தலைவர்களும் அங்கு சென்று கைராட்டையில் நூல் நூற்றுச் செல்கின்றனர்.  அதேபோல் குஜராத்தில்தான் பிரம் மாண்டமான படேல் சிலை அமைக்கப் பட்டுள்ளது. பல கோடி ரூபாய் செலவில் அந்தச் சிலையை நிறுவினர். ஆனாலும் படேல் சிலைக்கு யாரையும் அழைத்துச் செல்வதில்லை. இந்தியாவின் அடையாளம் இன்றும் மகாத்மா காந்திதான். ஒருபுறம் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த வேளையில் தலை நகர் தில்லி உட்பட, நாட்டின் பல பகுதிக ளிலும் மத வன்முறைகள், பதற்றமான சூழல் நிலவியது. இந்தியா சுதந்திரத்துக்காகப் போராடிக் கொண்டிருந்த போது, மத வெறுப்பும், வன்முறையும் இருந்தது. இந்தி யாவுக்கு சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் நிலைமை அப்படியேதான் இருக்கிறது. ஆங்கிலே யர்கள் நாட்டை விட்டு வெளியேறிய அதே நிலை யிலேயே ஜான்சன் இந்தியாவைப் பார்த்தார்.” இவ்வாறு ‘சாம்னா’வில் எழுதப் பட்டுள்ளது.