விருதுநகர், ஏப்.23- விருதுநகர் சந்தையில் நல்லெண் ணெய் மற்றும் பாமாயில் ஆகியவற்றின் விலையானது தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. உருட்டு உளுந்தம் பருப்பின் விலை சற்று குறைந்து காணப்பட்டது. விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வரு கிறது. அதன் விபரம் வருமாறு : கடந்த வாரம் 15 கிலோ நல்லெண் ணெய் டின் ஒன்றின் விலையானது ரூ.6435க்கு விற்கப்பட்டு வந்த நிலை யில், இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.165 வரை உயர்த்தப்பட்டு தற்போது ரூ.6600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பாமாயில் விலையானது கடந்த வாரம் 15 கிலோ ரூ.1510 என்ற விலைக்கு விற்கப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்று க்கு ரூ.40 உயர்த்தப்பட்டு ரூ.1550க்கு விற்ப னை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வினால், எண்ணெய் பலகார விற் பனையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ள னர். மல்லி 40 கிலோ கடந்த வாரம் ரூ.3200க்கு விற்பனையான நிலையில் இந்த வாரம் ரூ.200 குறைந்து தற்போது தற்போது ரூ.3ஆயிரத்திற்கு விற்கப்படு கிறது. உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ நாடு வகையானது கடந்த வாரம் ரூ.12ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் சந்தைக்கு வரத்து அதிகரிப்பால் மூட்டை ஒன்று க்கு ஒரே வாரத்தில் ரூ/900 சரிவு ஏற்பட்டு தற்போது ரூ.11,100க்கு விற்பனை யாகிறது. இதேபோல் லயன் உளுந்து வகை யானது கடந்த வாரம் ரூ.8200க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மூட்டை ஒன்றுக்குரூ.400 குறைந்து ரூ.7800 க்கு விற்கப்படுகிறது. இந்த விலை குறைவினால் ஹோட்டல் உரிமையாளர் கள், இட்லி, தோசை விற்பனையாளர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். பாசிப் பருப்பு 100 கிலோ கடந்த வாரம் ரூ.10,500க்கு விற்கப்பட்டு வந்த நிலை யில் தற்போது மூட்டை ஒன்றுக்கு ரூ.200 குறைவு ஏற்பட்டு, தற்போது ரூ.10,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் பாசிப்பயறு ( இந்தியா நாடு வகை ) விலையானது, உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து சந்தைக்கு வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் மூட்டை ஒன்றுக்கு ரூ.500குறைந்துள்ளது. இதன் காரணமாக தற்போது மூட்டை ஒன்று ரூ.7800க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிற உணவுப் பொருட்களின் விலை யில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.