states

img

அமித்ஷா வந்த அடுத்த நாளே களைகட்டத் துவங்கிய கலகம்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஞாயிறன்று தமிழ்நாடு வந்திருந்தார். தென்  சென்னை மக்களவைத் தொகுதி செயல்வீரர்  கள் கூட்டம் மற்றும் வேலூரில் நடந்த பொதுக்  கூட்டத்தில் பங்கேற்ற அவர், இந்த இரு தொகுதி களிலும் பாஜகவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றார். அதற்கு முன்பு, சில முக்கிய பிரமுகர்கள்  என்று கூறப்பட்டவர்களை அவர் சந்தித்தி ருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி 25 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று கூட்டங்களில் அவர் பேசியுள்ளார். அந்தக் கூட்டங்களில் யார் யார் இருக்கி றார்கள், யார் யாருக்கு எத்தனை இடம் என்று  இன்னமும் முடிவாகவில்லை. அதற்குள் தென்  தென்னை மற்றும் வேலூர் தொகுதிக்கு துண்டை போட்டிருக்கிறார் அமித்ஷா. இது,

அதிமுகவை ஆத்திரமடையச் செய்  துள்ளது. தொகுதிகளை இறுதி செய்வது அதி முக தான் என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் உடனடியாக பதிலளித்துள்ளார். பாஜக விரும்பும் தொகுதிகளை சொன்னால், அதன் பிறகு முடிவு செய்யலாம். தேர்தலுக்கு இன்னமும் காலம் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டுக்கு வந்தாலே பிரதமர் மோடிக்கும், ஒன்றிய அமைச்சர்களுக்கும் தமிழ் மீதும், தமிழ்நாட்டின் மீதும் பாசம் அண்டாக்கணக்கில் பொங்கத் துவங்கிவிடும். இந்த முறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொஞ்  சம் அதிகமாகவே பொங்கிவிட்டது. எதிர் காலத்தில் தமிழர் ஒருவரை நாட்டின் பிரதம ராக்குவோம் என்று நாக்கிலே தேன் தடவி யிருக்கிறார். எங்கே ஓபிஎஸ் பிரதமர் பதவி போட்டிக்கு வந்துவிட போகிறாரோ என்ற  அச்சத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னை யன், பிரதமராக வருவதற்கு தகுதியானவர் இபிஎஸ்தான் என்று கூறியுள்ளதோடு, அவருக்கு ஆங்கிலப் புலமை, பொருளாதாரம் சார்ந்த அறிவு, உலக அரசியல் என பல தகுதி கள் உள்ளன என்று கூறியுள்ளார். இப்படி யாரும் அவசரப்பட்டுவிடக் கூடாது என்ப தற்காக வரும் தேர்தலில் மோடி தான் பிரதமர்  வேட்பாளர் என்பதையும் அமித்ஷா தெளிவு படுத்திவிட்டார். அப்படியென்றால் வருங் காலம் என்பது கி.பி. 3 ஆயிரம் அல்லது 4 ஆயி ரம் என்று புரிந்து கொள்ள வேண்டும் போலி ருக்கிறது.

பிரதமர் மோடியும், அமைச்சர் அமித்ஷா வும் அடிக்கடி கர்நாடகம் சென்ற நிலையில், அங்கு பாஜக கூடாரம் காலியானது. இப்போது  அமித்ஷாவின் கவனம் தமிழ்நாட்டின் பக்கம் திரும்பியதால் அதிமுக - பாஜக கூட்டணியே பணால் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கெ னவே அதிமுகவுடன் கூட்டணி வைத்தால், மாநி லத் தலைவராக தொடர மாட்டேன் என சபதம்  செய்தார். இந்தக் கூட்டணியை குலைப்பதில் அவர் இன்னமும் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது. அதிமுகவினரை அவ்வப்போது சீண்டிக்கொண்டிருந்த அண்ணாமலை, இப்போது அக்கட்சியின் தலைவரான மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதே தாக்கு தல் தொடுக்க துணிந்துவிட்டார். ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழுக்கு பேட்டி யளித்துள்ள அவர், தமிழ்நாட்டின் முதல்வர் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட வரலாறு உள்ளது என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள டி.ஜெயக்குமார், கத்துக் குட்டி அண்ணாமலைக்கு ஒன்றும் தெரி யாது. இவருக்கு நாவடக்கம் தேவை. தலை வர் பதவிக்கே தகுதியில்லாதவர் அண்ணா மலை என்று போட்டுத் தாக்கியிருக்கிறார்.

அத்துடன் நில்லாமல் கர்நாடக மாநிலத்தில் பாஜகவினர் 40 சதவீத கமிஷன் ஊழலை ஏன் அண்ணாமலை பேசவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கழுதைக்கு தெரி யுமா கற்பூர வாசனை? என ஓபிஎஸ் தனது பங்கிற்கு அண்ணாமலையை கழுதையோடு ஒப்பிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் பொன்னையன், பாஜகவை முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மட்டும் எதிர்க்கவில்லை. பட்டியலின மக்களும் எதிர்க்கிறார்கள். பாஜகவின் மதவாதக் கொள்கையால் அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்துள்ளது என்று உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். அமித்ஷாவுடன் உலா வந்த அண்ணா மலை அவர் டில்லி பக்கம் போனவுடனேயே கூட்டணிக்கு உலை வைத்துவிட்டார். தன்னை  ஏன் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வில்லை என்று அண்ணாமலைக்கு கோபம் போலிருக்கிறது. அண்ணாமலைக்கு அதிமுக வினர் அரோகரா போடத் துவங்கியுள்ள நிலை யில், இனிவரும் காட்சிகள் பரபரப்பாகவே இருக்கும். முடிவில் இந்தக் கூட்டணி கிழிந்து தொங்கப் போவது உறுதி.