states

ஓரிரு நாளில் மின்தடை சரியாகிவிடும்

சென்னை,ஏப்.23- தமிழகத்தில் ஓரிரு நாட்களில் மின் தடை சரியாகிவிடும் என்று தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.  சென்னையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெளி மாநிலங்களிடம் இருந்து மின் சாரம் வாங்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கூடுதல் மின்சாரம் வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலக்கரியை எடுத்து வருவதில் கால தாமதம் உள்ளது. மத்திய தொகுப்பு மின்சாரம் கிடைக்காததும் ஒரு காரணம். நாள் ஒன்றுக்கு 72ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், அதையும் குறைத்ததே மின்தடைக்கு காரணம் . முதலமைச்சர் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக சிக்கல் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும். தமிழகத்தில் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்று தெரிவித்தார்.