சென்னை, மார்ச் 1- தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வேலை ஊதியத் திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலை வர் எம். சின்னதுரை எம்எல்ஏ, மாநிலப் பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: விவசாயத்தில் நவீன எந்திரமயமாக்கல் உள்ளிட்ட காரணங்களால் வேலை நாட்கள் குறைந்து, விவசாய வேலைகளை மட்டுமே நம்பியிருந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வேலை- வருமானம் இழந்துள்ளனர் .கிராமப்புறங்களில் வாழும் விவசாயக் கூலித்தொழிலாளர்களுக்கு ஊரக வேலை திட்டம் உள்ளதைப் போல பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற தொழி லாளர்களுக்கு வேலை திட்டத்தை உரு வாக்க வேண்டும் என்று அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் தமிழ்நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட கிராமப்புற தன்மை கொண்ட பேரூராட்சிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து லட்சக்கணக்கான மக்களை அணி திரட்டி போராட்டம் நடத்தியது.இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் 2021 ஆம் ஆண்டு நகர்ப்புற வேலை ஊதியத் திட்டம் தமிழ்நாடு அரசால் அறி விக்கப்பட்டது.
முதல் கட்டமாக 37 பேரூ ராட்சிகளிலும் ஏழு நகராட்சிகளிலும், 7 மாநக ராட்சிகளில் தலா ஒரு வார்டிலும், ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்த ப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டங்கள் நடத்தியபோதும் அந்த கோரிக்கையை அன்றைய அதிமுக அரசு அலட்சியப்படுத்திய நிலையில், தமிழ்நாடு அரசு திட்டத்தை அறிவித்து செயல்படுத்துவது பாராட்டுக்குரிய அம்ச மாகும். செயல்படுத்தப்படும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு சிறு பகுதி யினருக்கு வேலை கிடைத்து வருகிறது. முதல் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை வைத்து இரண்டு ஆண்டுகளாக வேலைத் திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.அரசு அறிவித்தவாறு அடுத்த கட்டமாக பேரூ ராட்சிகளுக்கு வேலைத்திட்டம் விரிவு படுத்தப்படவில்லை.நிதி ஒதுக்கீடும் இல்லை. இதனால் ஏற்கனவே அமல்படு த்தப்பட்ட பல பேரூராட்சி,நகராட்சிகளில் திட்டம் நிதியின்றி தற்போது நிறுத்தப் பட்டுள்ளது. நகர்ப்புற வேலையின்மை மிகத் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் கிடைத்து வந்த வேலையும் கிடைக்கா மல் நகர்ப்புற தொழிலாளர்கள் திண்டாட்டத் தில் உள்ளனர். ஆகவே, வரும் நிதிநிலை அறிக்கை யில் தமிழ்நாடு அரசு குறைந்தபட்சம் ஆயி ரம் கோடி ரூபாய் நிதியை திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்தும், கிராமப்புற தன்மை கொண்ட விவசாயக் கூலித் தொழிலாளர் கள் உள்ளிட்ட பிரிவினர் வசிக்கும் பேரூ ராட்சிகள் அனைத்திற்கும் திட்டத்தை விரிவு படுத்தி செயல்படுத்திடவும், ஒதுக்கப்பட்ட நிதியில் தற்போதும் மீதம் இருக்கும் பேரூராட்சிகளில் தொடர்ச்சியாகவும் அதி கமான தொழிலாளர்களுக்கு வேலையும் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.