சென்னை, ஜூலை 16- தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக இருந்த சரஸ்வதி, சரண்யா ஜெயக்குமார், துரைராஜ், முரளிகுமார் உள்ளிட்ட உறுப்பி னர்களையும் நீக்கி 2022 பிப்ரவரி மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் புதிய தலைவர் மற்றும் உறுப்பி னர்கள் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்களை வர வேற்க ஆணையத்தின் செயலாளருக்கு அனுமதி அளிக் கப்படுவதாகவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள் ளது. இந்த உத்தரவை எதிர்த்து ஆணையத்தின் தலை வர் சரஸ்வதி மற்றும் சரண்யா ஜெயக்குமார் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை நீதிபதி அப்துல்குத்தூஸ் விசா ரித்தார். அப்போது அரசுத் தரப்பின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, “கவுரவ பதவியாக இருந்தாலும், ஆணை யத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்கு வதற்கான உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. குழந்தைகள் உரிமைகள் சட்டப்படி ஆணைய தலை வர் மற்றும் உறுப்பினர்கள் விளக்கமளிக்க அவகாசம் வழங்காமல் நியமனத்தை ரத்து செய்தது சட்ட விரோ தம் என்று கூறி அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.