சென்னை, ஜூன் 17 - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகி யோர் தங்களை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்ட வழக்கில் 31 ஆண்டு களாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறி வாளன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரையும் அரசமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின் கீழ் விடுதலை செய்வது என 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 9 அன்று தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறை வேற்றியது. இந்த தீர்மானம் 2018 செப்டம்பர் 11 அன்று ஆளுநரின் ஒப்பு தலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் இரண்டரை ஆண்டு களுக்கும் மேலாக இதில் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதையடுத்து, தமிழக அமைச்சர வை தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநர் தாமதிப்பதால், அவரது ஒப்புத லுக்கு காத்திருக்காமல் தமிழ்நாடு அரசே நேரடியாக தன்னை விடு தலை செய்வதற்கு உத்தரவிட வேண் டும் என்று நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில்வழக்குதொடர்ந்திருந்தார்.
“தன்னை விடுதலை செய்ய அரசு முடிவெடுத்த பிறகு, விடுவிக்கப் படாத ஒவ்வொரு நாளும் சட்ட விரோத காவலில் இருப்பதாக கருதி தன்னை விடுவிக்க வேண்டும். தாமாக விடுதலை செய்யக் கோரவில்லை எனவும், உச்சநீதிமன்ற உத்தரவின் படி ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்தி ருக்காமல் தமிழக அரசே நேரடியாக விடுதலை செய்வதற்கு உத்தரவிடவே, தான் கோருவதாகவும், அநீதியை அழிக்க உயர் நீதிமன்றம் எந்த உத்தர வையும் பிறப்பிக்கலாம்” என்றும் நளினி தனது மனுவில் கூறியிருந்தார். முன்னதாக ரவிச்சந்திரனும் 2020-ஆம் ஆண்டு உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என். மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். ராதாகிருஷ்ணன், “அமைச்சர வை தீர்மானத்தின் அடிப்படையில் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்த தும், இரண்டரை ஆண்டுகளுக்கு பின் அமைச்சரவை பரிந்துரையை குடி யரசு தலைவருக்கு அனுப்பியதும் அர சியல் சாசனத்துக்கு விரோதமானது” என வாதிட்டார். “இரண்டரை ஆண்டுகள் அமைச்ச ரவை பரிந்துரை மீது எந்த முடிவும் தெரிவிக்காமல் குடியரசு தலை வருக்கு அனுப்பியதால் இந்த விவ காரத்தை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கக்கூடாது” எனவும் வலி யுறுத்தினார்.
இதேபோல ரவிச்சந்திரன் தரப்பில் வழக்கறிஞர் சாமிதுரை ஆஜராகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வாசம் அனுபவிக்கும் ரவிச்சந்திரனை விடுவிக்க தமிழக அரசு 2018-ஆம் ஆண்டு முடிவெடுத்தாலும் இதுவரை அவர் சிறைவாசம் அனுபவிப்பதாக வும். அரசின் முடிவை அமல்படுத்தும் வகையில் ரவிச்சந்திரனை விடுவிக்க உத்தரவிட வேண்டுமென்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதாகவும், ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018-ஆம் ஆண்டே தமிழ்நாடு அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரைத்துவிட்ட தாகவும் குறிப்பிட்டார். மேலும், ஆளு நரின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளதாக கூறிய அவர், “விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரின் கையெழுத்து அவசியம்” என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாக வும், எனினும், இந்த வழக்கில் உயர் நீதிமன்றமே முடிவெடுக்கலாம் எனவும் வாதிட்டார். இந்நிலையில், வெள்ளியன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என். மாலா தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “உச்சநீதிமன்றத்திற்கு அர சமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைப் போல உயர்நீதிமன்றத்திற்கு வழங்கப் படவில்லை என்பதால், தாங்கள் விடுவிக்க முடியாது” என்ற நீதிபதிகள், நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.
தீர்ப்பிற்குப் பின்னர் வெளியே வந்த நளினி தரப்பு வழக்கறிஞர் எம். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘ஏழு பேரில் ஒருவரை விடுதலை செய்துவிட்டீர் கள், நளினியை விடுதலை செய்யாமல் இருப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது என உச்சநீதிமன்றத்தில் முறை யிட இருக்கிறோம்; வெகுவிரைவில் நளினி விடுதலை செய்யப்படுவார்’ என்று தெரிவித்தார். தனது தாயார் பத்மாவதி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கவனித்துக் கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என நளினி கோரிக்கை விடுத்ததை அடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி நளி னிக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அப்போது முதல் நளி னிக்கு தொடர்ந்து 4 முறை பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.