விழுப்புரம்,மே 15 சாதிய ஒடுக்குமுறைகளை ஒழித்திடுவோம், சாதியற்ற சமத்துவ சமூகம் படைத்திடுவோம் என்ற முழக்கத்தோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் விழுப்புரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சித் திடலில் செவ்வாயன்று (மே 16) பட்டியலின பழங்குடி மக்கள் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக துணைப் பொதுச் செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சிபிஐ மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், பாலபிரஜாபதி அடிகளார், விசிக பொதுச் செயலாளர் டி.ரவிக்குமார் எம்.பி., மதிமுக அரசியல் ஆய்வு மையச் செயலாளர் மு.செந்திலதிபன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ., திராவிடர் கழக பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன், ஆதித் தமிழர் கட்சி நிறுவன தலைவர் கு.ஜக்கையன், தியாகி இமானுவேல் பேரவை முதன்மை செயலாளர் வீ.பி.வேல்முருகன், மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில செயற் குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, கே.சாமுவேல்ராஜ், மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், விழுப்புரம் மாவட் டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.