சமயபுரம் கோவிலில் தங்க காசுகள் திருடிய அதிகாரி தலைமறைவு
திருச்சி,டிச.17- திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் மாரியம்மன் கோவில் அமைந் துள்ளது. இங்கு வந்து செல்லும் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை மாதம் இருமுறை எண்ணப்படுகிறது. அதன்படி, கோவில் மைய மண்ட பத்தின் மாடியில் எண்ணப்பட்டது. அந்த கோவிலின் இணை ஆணை யர் கல்யாணி முன்னிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள், வங்கி ஊழியர்கள், கோவில் பணி யாளர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். அப்போது பணம், வெள்ளி மற்றும் தங்க காசுகள் தனித்தனியாக பிரித்த னர். அங்கிருந்த திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் செயல் அலுவ லர் வெற்றிவேல் சில தங்க காசுகளை எடுத்து மறைத்து வைத்துள்ளார். இது குறித்து கல்யாணிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை பரிசோதித்தபோது சட்டை பையில் மறைத்து வைத்திருந்த 30 கிராம் எடையுள்ள 5 தங்க காசுகள் பறி முதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தன் மீது நடவடிக்கை எடுத்தால் தற்கொலை செய்வதாக வெற்றிவேல் மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் இதுபற்றி உயர் அதிகாரிகள் மற்றும் சமயபுரம் காவல்நிலையத்திற்கும் புகார் செய்துள்ளனர். இதனையடுத்து, அவர் தலைமறைவாகியுள்ளார். அவ ரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.
ஆவின் வெண்ணெய் விலையும் உயர்வு
சென்னை,டிச.17- ஆவின் நெய்யை தொடர்ந்து ஆவின் வெண்ணெய் விலை உயர்த்தப் பட்டுள்ளது. புதிய விலை சனிக்கிழமை (டிச.17) முதல் அமலுக்கு வந்தது. வெண்ணெய் விலையையும் உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி சமை யலுக்கு பயன்பத்தப்படும் உப்பு கலக்காத 100 கிராம் வெண்ணெய் 52 ரூபாயிலிருந்து 55 ஆக உயர்த்தி யுள்ளனர். 500 கிராம் 250 ரூபாயிலிருந்து 260 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உப்பு கலந்த 100 கிராம் வெண்ணெய் 52 ரூபாயிலிருந்து 55 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 500 கிராம் 255 ரூபாயிலிருந்து 265 ரூபாயாக உயர்த்தியுள்ளனர். இந்த விலை உயர்வு சனிக்கிழமை (டிச.17) முதல் அமலுக்கு வருவதாக அனைத்து ஒன்றியங்களின் பொது மேலாளர்களுக்கும் நிர்வாக இயக்கு நர் சுப்பையன் சுற்றறிக்கை அனுப்பி யிருந்த நிலையில் புதிய விலை அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக மார்ச் மாதம் நெய், தயிர் உள்ளிட்ட பால் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பரில் ஆரஞ்சு பால், மீண்டும் நெய் உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கனமழைக்கு வாய்ப்பு
சென்னை,டிச.17- தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் எதிரொலியால், தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்க ளில் டிசம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஏரியில் மூழ்கி 3 மாணவர்கள் பலி
திருவண்ணாமலை, டிச. 17- திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டத்திற்குட்பட்ட லாடவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கண்ண தாசன். இவரது மகன்கள், அருள் (10), அஜித் (9), சந்திப் (7) மூவரும் அரசுப் மேல்நிலைப் பள்ளியில் முறையே 5, 4, 2 ஆகிய வகு ப்புகளில் படித்து வந்தனர். அதே பகுதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவரது மகன் ஜீவன்குமார் (8). இவரும் அதேபள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த 4 பேரும் அருகிலுள்ள கங்கநல்லூர் ஏரிக்கு குளிக்கச் சென்ற னர். நீச்சல் தெரியாத கார ணத்தால், பள்ளத்தில் சிக்கி மூழ்கியுள்ளனர். அஜித் மட்டும் உயிர் தப்பி வீடு திரும்பியுள்ளார். இரவு 7 மணியாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் குழந்தைகளை தேடத் துவங்கினர். அப்போதுதான் அந்த 3 மாணவர்களும் தண்ணீரில் மூழ்கியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போளூர் தீயணைப்பு துறையின ருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீ அணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய 3 பேரை யும் சடலமாக மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கலசப்பாக்கம் காவல் துறை யினர் 3 பேரின் சடலத்தை யும் மீட்டு பிரேத பரிசோத னைக்காக திருவண்ணா மலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3 சிறுவர்கள் ஒரே நேரத்தில் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
18 மாதங்களில் ரூ.71 கோடி குட்கா பறிமுதல்
சென்னை, டிச.17- தமிழகத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்க காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டத்திலும் காவல் துறையினர் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி கடந்த 1 ஆண்டில் மட்டும் ரூ.71 கோடியே 58 லட்சத்து 97 ஆயிரத்து 800 மதிப்பிலான குட்கா போதை பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டு மல்ல, கடந்த ஆண்டு மே 1 தேதி முதல் கடந்த 9 ஆம் தேதி வரையில் 17 மாதங்க ளில் 53,235 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 7 லட்சத்து 95 ஆயிரத்து 442 கிலோ மதிப்பிலான குட்கா கைப்பற்றப்பட்டுள்ளது. குட்கா கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 769 இருசக்கர வாகனங்களும், 679 கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 52 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. குட்கா விற்பனை தொடர்பாக 13,534 வழக்குகள் போடப் பட்டுள்ளன. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 18,569 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கஞ்சா வேட்டை 3.0 என்ற பெயரில் மாநிலம் முழுவதும் கஞ்சா வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 12 ஆம் தேதி தொடங்கிய இந்த வேட்டையில் 403 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி காவல் நடவடிக்கை தீவிரமாக இருந்த போதிலும் கஞ்சா, குட்கா கடத்தல் ஆசாமிகள், கடல் வழியாகவும், பேருந்து ரயில் வழியாகவும் கடத்தல் சம்பவத்தை தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருக் கிறார்கள்.
90 லட்சம் கோமாரி நோய் தடுப்பூசியை வழங்காத ஒன்றிய அரசு: முதல்வர் கடிதம்
சென்னை, டிச.17- “தமிழகத்திற்கு வழங்க வேண் டிய 90 லட்சம் கோமாரி நோய் தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும்” என்று ஒன்றிய அமைச் சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 90 லட்சம் கோமாரி நோய் தடுப்பூசியை விரைந்து வழங்க வலியுறுத்தி ஒன்றிய கால் நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா வுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “தமிழ் நாட்டிற்கு தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த செப்டம்பர் 2022-இல் வழங்க வேண்டிய தடுப்பூசி ஒன்றிய அரசு இதுவரைக்கும் வழங்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில், தமிழ் நாட்டில் கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்படு வதைத் தடுக்கவும், அவற்றின் நோய் எதிர்ப்புச் சக்தியினைப் பராமரிக்கவும், விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பைத் தடுக்கவும் தமிழ்நாடு அரசு கோரியுள்ள 90 லட்சம் தடுப்பூசியை விரைந்து வழங்க வேண்டும்” இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.
மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிப்பு
சென்னை, டிச.17- பள்ளி மாணவர்களுக்கு வரும் 24 ஆம் தேதி முதல் ஐனவரி 1 வரை அரையாண்டுத் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிச.17 சனிக்கிழமை தொடங்கியது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களிலும், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. முதலில் மொழிப் பாடத்துக்கும் பின், அறிவியல், கணிதம், பொருளி யல் உள்ளிட்ட மற்ற பாடங்களுக்கும் தேர்வு நடக்கிறது. மாவட்ட அள வில், பொதுவான வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளன. 9, 10, 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 23 ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடக்கிறது. 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.19 தொடங்கி 23 ஆம் தேதி வரை தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் அந்தந்த மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் தயாரிக்கப்பட்டு உள்ளது. வினாத்தாள்களை ஆசிரி யர்கள், பணியாளர்கள் செல் போனில் புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகிற 23 ஆம் தேதி தேர்வு கள் அனைத்தும் முடிகின்றன. அதை தொடர்ந்து பள்ளிகளுக்கு அரை யாண்டுத் தேர்வு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்படு கிறது. பிறகு, ஜனவரி 2 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித் திருக்கிறது.