மதுரை, மே 27- பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கை, வெறுப்பு அரசிய லைக் கண்டித்தும் பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு மீதான வரிகளை கைவிட வேண்டும். விலை உயர்வுகளை மொத்தமாக திரும்பப்பெற வேண்டும். பருப்பு . சமையல் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் நியாய விலைக்கடைகளில் வழங்க வேண்டும். வருமான வரி வரம்பை எட்டாத அனைத்து குடும் பங்களுக்கும் மாதம் ரூ .7500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்-லிபரேசன்), விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் ஆகியவற்றின் சார்பில் மே 27 அன்று மதுரை மாநகர், மதுரை புறநகர், இராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாநகரில் ஜான்சி ராணி பூங்கா தேதாஜி சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், சிபிஐ மாவட்டச் செயலாளர் எம். எஸ். முருகன், விசிக மாநில துணை பொதுச் செயலாளர் கனியமுதன் , சிபிஐ (எம்எல்- லிபரேசன்) மாவட்டச் செயலாளர் மதிவாணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். விசிக மாவட்டச் செயலாளர் பா. கதிரவன் மற்றும் நான்கு கட்சி களின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். மதுரை மாநகரில் செல்லூர் 50 அடி சாலையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தல் சிபிஎம் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், சிபிஐ மாவட்டச் செயலாளர் எம். எஸ். முரு கன், சிபிஐ (எம்எல்-லிபரேசன் மாவட்டச் செயலாளர் மதி வாணன் விசிக முதன்மைச் செயலாளர் பாவரசு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மதுரை புறநகர்
மதுரை புறநகரில் திருமங்கலம் மற்றும் யா.ஒத்தக்கடை ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. யா. ஒத்தக்கடையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநி லக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, சிபிஐ மாவட்டச் செயலாளர் பா.காளிதாஸ் , விசிக வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வ அரசு ஆகியோர் பேசினர். திருமங்கலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன்,விசிக தெற்கு மாவட்ட செயலாளர் வி.இன்குலாப்,சிபிஎம் (எம்-எல்.லிபரேசன்) மாவட்ட செயலாளர் சி மதிவாணன் ஆகியோர் பேசினர்.
விருதுநகர்
விருதுநகரில் சிபிஎம் மூத்த தலைவர் எஸ்.பாலசுப்பிர மணியன், சிபிஐ பாண்டியன், விசிக மாநில செயலாளர் போத்திராஜ், ஏ.ஆர்.சக்திவேல் ஆகியோர் விளக்கிப் பேசினர். சிவகாசி, திருச்சுழி, காரியாபட்டி, சாத்தூர், வெம்பக் கோட்டை ஆகிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இராஜபாளையம்
இராஜபாளையம் நகர் ,ராஜபாளையம் மேற்கு, ராஜபாளையம் கிழக்கு, வத்திராயிருப்பு,திருவில்லிபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜ பாளையம் ஜவகர் மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் அர்ஜுனன்,சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ரவி,வி.சி.க. மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். ராஜபாளையம் மேற்கு ஒன்றியம் செட்டியார்பட்டி அரசரடி பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் மகா லட்சுமி, சிபிஐ மாவட்ட செயலாளர் லிங்கம், விசிக சார்பில் ஊமத்துரை ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தேனி
தேனி அல்லிநகரம் அம்பேத்கர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்ட செய லாளர் ஏ.வி.அண்ணாமலை ,சிபிஐ மாவட்ட செயலாளர் கே.பெருமாள் ,விசிக கிழக்கு மாவட்ட செயலாளர் ப.நாக ரத்தினம்,மேற்கு மாவட்ட செயலாளர் சோ.சுருளி ,அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சக்கர வர்த்தி, எஸ்யுசிஐ மாவட்ட செயலாளர் டி.சி.சத்தியமூர்த்தி ஆகியோர் பேசினர்.