திருவாரூர், ஆக.31 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் கதிராமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராவார். இவர் கொல்லுமாங்குடியில் உள்ள ஒரு அடகுக்கடையில் நகையை அடகு வைத்திருந்தார். திங்கள்கிழமை தனது மகன் சுர்ஜித்திடம் நகையை மீட்பதற்காக அடகு ரசீது மற்றும் பணத்தைக் கொடுத்து அனுப்பியுள்ளார். அதன்படி, சுர்ஜித் நகையை மீட்டு தனது இருசக்கர வாகனத்தின் டேங்க் உறையில் வைத்து எடுத்து வந்துள்ளார். வீட்டில் வந்து பார்த்த போது நகையை காணவில்லை. அதிலிருந்து சுர்ஜித் மன வேதனையில் இருந்திருக்கிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்த சுர்ஜித், சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே நகையை தொலைத்ததால் சுர்ஜித் தற்கொலை செய்து கொண்ட செய்தி அக்கம் பக்கத்தில் பரவியது. சுர்ஜித் நகையை மீட்டு வரும் போது வழியிலேயே விழுந்திருக்கிறது. நகையின் மீது லாரி ஏறி நசுங்கிய நிலையில், சாலையோரம் உள்ள வீட்டினர் எடுத்து, யாராவது வந்து கேட்டால் கொடுக்க லாம் என வைத்திருந்திருக்கின்றனர். சுர்ஜித் இறந்த தகவல் அறிந்து அக்குடும்பத்தினர் உரியவர்களிடம் நகையை ஒப்படைத்தனர். ‘காணாமல் போன நகை கிடைத்து விட்டது; ஆனால் மகனை தொலைத்து விட்டோமே’ என பெற்றோர் வேதனை யில் உள்ளனர்.