states

கூட்டுக் கொள்ளை முதலாளித்துவம் யாதெனில்...

மோடி அரசை கூட்டுக் களவாணி முதலாளித்து வம் என இடதுசாரி கள் கடுமையாக விமர்சிக் கின்றனர். இதன் பொருள் என்ன? முதலாளித்துவம் என்பதே சுரண்டல் நிறைந்த கொள்ளை லாபம் பார்க்கும் பொருளாதார அமைப்புதான்! ஆனால் ‘Crony Capitalism’ எனும் கூட்டுக்  களவாணி முதலாளித்துவம் என்பது ஆட்சியில் இருக்கும் அரசு இந்த கொள்ளை லாபத்தை தனக்கு வேண்டிய சில பெரு முதலாளிகளுக்கு மட்டும் வழி வகுப்பது ஆகும். மோடி அரசின் கூட்டாளிகள், குறிப்பாக அதானி குழுமம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதானிக்காக ஏனைய முதலாளி களையே துன்புறுத்த மோடி அரசு தயங்கியது இல்லை. சில உதாரணங்கள்:

அமலாக்கத்துறை ஜிவிகே (GVK) குழுமத்தின் மும்பை விமான நிலையத்தை ரெய்டு செய்தது. தற்போது மும்பை விமான நிலையம் அதானி குழுமத்தின் கைகளில்!

வருமானவரி துறை நெல்லூர் கிருஷ்ணப்பட்டினம் துறைமுக அலுவலகத்தில் ரெய்டு செய்தது. பின்னர் கிருஷ்ணப்பட்டினம் துறைமுகம் அதானி குழுமத்தின் கைகளில்!

அமலாக்கத்துறை அம்புஜா சிமெண்ட் அலுவலகத்தை ரெய்டு செய்தது. பின்னர் அம்புஜா சிமெண்ட் அதானி குழுமத்தின் கைகளில்!

மோடி அரசை ஓரளவுக்கு விமர்சித்த என்.டி.டி.வி அலுவலகத்தையும் அதன் உரிமையாளர் பிரணாய் ராய் வீட்டையும் சிபிஐ ரெய்டு செய்தது. பின்னர் என்.டி.டி.வி அதானி குழுமத்துக்கு சொந்தம். 

இன்னொரு விமர்சன இதழான “குவிண்ட்” இதழ் அலுவலகத்தை வருமானவரி துறை ரெய்டு செய்தது. பின்னர் குவிண்ட் இதழ் அதானி குழுமத்தின் வளையத்தில்!

இவை சில உதாரணங்கள்தான்!  அதானி குழுமம் எப்படி உலகின் மிகப்பெரிய பணக்கார குழுமமாக மாறியது எனும் ரகசியம் இதுதான்! முதலாளித்துவம் மோசமானது. அதிலும் கூட்டுக் கொள்ளை முதலாளித்துவம் இந்தியாவின் சாபக்கேடு! 

இதனை அகற்றாவிடில் இந்திய மக்களின் துன்பங்களை தடுக்க இயலாது.  இந்திய சமூகத்தை சீரழிக்கும் கூட்டு கொள்ளை முதலாளித்துவத்தை அகற்ற மோடி அரசை அகற்றுவோம்! 

பா.ஜ.க.வையும்  அதன் நேர்முக, மறைமுக கூட்டாளிகளையும் தோற்கடிப்போம்.