புதுதில்லி, டிச.28- பிறப்பால் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், முஸ்லிம் களுக்கும் இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளை வழங்கும் விவகா ரத்தில், ஒன்றிய பாஜக அரசு அமைத்துள்ள நீதிபதி கே.ஜி. பால கிருஷ்ணன் தலைமையிலான ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கெனவே நிலுவையிலுள்ள வழக்குகளின் விசாரணையை தாம தப்படுத்தும் வகையிலேயே நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்து மதத்தைச் சேர்ந்த பட்டியல் வகுப்பினருக்கு மட்டும் இடஒதுக் கீடு வழங்கப்பட்டது. கடந்த 1956-ஆம் ஆண்டில் சீக்கிய மதம், 1990-ஆம் ஆண்டில் பவுத்த மதத்தை சேர்ந்த பட்டியல் வகுப்பினருக்கும் இடஒதுக்கீட்டு சலுகைகள் வழங் கப்பட்டன. இதேபோன்று இந்து மதத்தில் இருந்து முஸ்லிம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மதங்களுக்கு மாறிய பட்டியல் வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டு உள்ளது.
இதையொட்டி ஏற்கெனவே தொடரப்பட்ட மனுக்க ளும் கடந்த 18 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இவ்வாறு வழக்குகள் விசார ணையில் இருக்கும் நிலையில், “மதம் மாறியவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்கலாமா, வேண் டாமா?” என்பது குறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பால கிருஷ்ணன் தலைமையில் ஒன்றிய அரசு ஆணையம் ஒன்றை அண்மை யில் அமைத்தது. இதனிடையே, ஒன்றிய அரசின் ஆணையத்திற்கு எதிராக, பிரதாப் பாபுராவ் பண்டிட் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். “முஸ்லிம், கிறிஸ்தவ மதங் களை சேர்ந்த பட்டியல் வகுப்பி னருக்கும் எஸ்.சி. அந்தஸ்து வழங்கக் கோரி கடந்த 2004-ஆம் ஆண்டு முதலே உச்ச நீதிமன்றத்தில் முறை யிட்டு வருகிறோம்.
ஆனால் இது வரை நீதி கிடைக்கவில்லை. இந் நிலையில், கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவை செயல் பட அனுமதித்தால், அது ரிட் மனு மீதான விசாரணையை மேலும் தாம தப்படுத்தும். ஏற்கெனவே பிறப்பால் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்குப் பட்டியல் வகுப்பினருக்குரிய சிறப்புரிமை கள் 72 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், ரிட் மனு மீதான விசாரணை தாமதமா னால், அது அவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும். அத்துடன் இது வேதனைக்குள் ளான சமூகத்தின் அடிப்படை உரி மைகளைப் பாதிக்கும். எனவே, புதிய ஆணைய நியமனத்தை ரத்து செய்ய செய்து, அரசமைப்புச் சட்டப் பிரிவு 21-இன் படி விரைந்து நீதி கிடைக்க உச்சநீதிமன்றம் உத்தர விட வேண்டும்” என்று அந்த மனு வில் அவர் தெரிவித்துள்ளார். குளிர்கால விடுமுறைக்குப் பின், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத் துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.