states

கட்டப்படும் அரசு அலுவலகங்கள் மக்கள் எளிதாக வந்து செல்லும் நிலையில் இருக்க வேண்டும் : உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

மதுரை, டிச. 7-  கட்டப்படும் அரசு அலுவலகங்கள் பொது மக்கள் எளிதாக வந்து செல்லும் நிலையில் இருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த குணசீலன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு. அதில், “தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, உடன்குடி கிராமத்தில் பத்திரப்பதிவுத் துறை அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. புகழேந்தி என்பவர் உடன்குடி அனல் மின் நிலையம் அருகே, உடன்குடி நகரில் இருந்து  சுமார் 4 கிலோமீட்டர் வெளியே 2013 ஆம்  ஆண்டு ஜோதி நகர் என்ற பெயரில் அரசு அனு மதி பெற்று வீட்டுமனை விற்பனை செய்ய ஆரம்பித்தார். அங்கு அவர் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை நடைபெறவில்லை.  அருகில் அவரது மனைவி சசிகலா பெயரில் உள்ள 6 ஏக்கர் நிலத்தில் உடன்குடி பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்ட சுமார் 20 சென்ட் நிலம் நன்கொடையாக அளித்துள்ளார். இந்த இடம் உடன்குடி நகரின் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் நகருக்கு வெளியே உள்ளது. 

உடன்குடி பேருந்து நிலையத்தின் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக வளாகத் தில் சுமார் 3 ஏக்கர்க்கு மேல் காலி இடம் உள்ளது. பத்திரப்பதிவுத் துறையினர் உடன்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள இடத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நிரந்தர கட்டி டம் கட்டாமல், மேற்படி  தனியார் நன்கொடை யாக அளித்த இடத்தில் நிரந்தர கட்டிடம் கட்டு வதாக அறிவித்தனர்.  இதற்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரி வித்தனர். கொரோனா ஊரடங்கை பயன் படுத்தி அங்கு கட்டிடம் கட்டும் பணி ஆரம்பித்து  தற்போது முடிவடையும் சூழலில் உள்ளது.  மேற்படி புகழேந்தி தனது இடத்தில் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு தேவையான எழுத்தர், ஜெராக்ஸ் கடைகள், விலைக்கு மற்றும் வாடகைக்கு விட கட்டி வருகிறார். பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் தனி நபர் ஆதாயத்திற்காக மேற்படி நன்கொடையாக பெறப்பட்ட இடத்தில் கட்டிடம் கட்டியுள்ளனர். 

எனவே, தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன் குடி பத்திரப்பதிவு அலுவலகம் காட்டுப்பகுதி யில் கட்டப்பட்ட கட்டிடத்தில் அமைக்க தடை விதிக்கவும், நகரின் மையப் பகுதிக்குள் அமைக்க உத்தரவிட வேண்டும்.” என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு புதனன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் , அரசு அலுவலகங்கள் கட்டப்படும் போது பொது மக்கள் எளிதாக வந்து செல்லும் நிலையில் இருக்க வேண்டும். நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். வழக்கு குறித்து பத்திர பதிவுத்துறைத் தலைவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல்  செய்ய உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை யை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.