states

img

கோவில்களை அரசு ஆக்கிரமிக்கவில்லை

சென்னை,அக்.6- தமிழக அரசு கருணையுள்ள ஆட்சியை நடத்தி வருவதால் தான் வள்ளலாரைப் போற்று வதாகவும் அதன் அடையாளமாக கடலூர் மாவட்ட தலைநகரில் 17 ஏக்கரில் அமைக்கப்படவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு ‘அருள்பிரகாச வள்ளலார்’ என பெயர் சூட்டப்பட உள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ‘வள்ளலார்-200’ ஓராண்டு தொடர் அறநிகழ்வின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் வள்ள லாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்நாடு முழுவதும் 52  வாரங்கள் நடத்தப்பட்ட முப்பெரும் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து அமைக்கப்பட்ட சிறப்பு புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்.

இந்த விழாவில் பேசிய அவர்,  தமிழ்நாட்டில் இந்து கோயில் களை அரசு ஆக்கிரமித்துள்ள தாக பிரதமர் மோடி முன்வைத் துள்ள குற்றச்சாட்டு தவறானது” என்றார். ஒரு கூட்டம் ஆன்மீக உணர்வை அரசியலுக்குப் பயன்படுத்தி அதன் மூலம் குளிர்காய பார்க்கிறது என்றும் தமிழ்நாடு மக்கள் அரசியல் வேறு, ஆன்மீகம் வேறு என்பதை பகுத்தறிந்து பார்க்கும் பகுத்தறிவு உள்ளவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பரப்புரைக்காக வருகை  தந்த பிரதமர் மோடி, தமிழ்நாடு கோவில்களைப் பற்றி பேசியி ருக்கிறார். அப்போது தமிழ் நாட்டில் உள்ள இந்து கோயில் களை தமிழக அரசு கைப்பற்றி, ஆக்கிரமித்துள்ளது என்றும் கோயில் சொத்துகள், அதன் வருமானங்களை  முறைகேடாக பயன்படுத்தி வருகிறது என்றும்  கூறியுள்ளார். இந்த குற்றச் சாட்டை முதல்வர் திட்டவட்டமாக மறுத்தார். கடந்த இரண்டு ஆண்டு களில் மட்டும் தமிழ்நாட்டில் ரூ.3,500 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட் டுள்ளன. ஆயிரம் கோவில்க ளுக்கு குடமுழுக்கு நடத்தி யிருக்கிறோம். ஆயிரம் ஆண்டு கள் பழமை வாய்ந்த வரலாற்று  சிறப்புமிக்க 112 திருக்கோவில் களை பழமை மாறாமல் சீரமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கப் பட்டு திருப்பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இந்த நிதியாண்டில் மட்டும்  5,078 கோயில்களில் திருப்பணி கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் எந்த நடவடிக்கை பிரதமர் மோடி தவறு என்று கூறுகிறார். பிரதமரின் பார்வையில் தான் தவறு இருக்கிறது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.