தஞ்சாவூர், நவ.1- சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் திங்கள்கிழமை 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூர் மாவட்டம் அம்மா பேட்டை அருகே சாலியக் கோட்டையைச் சேர்ந்தவர் சரவணன் (36). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமிக்கு பாதுகாப்பாக இருக்கு மாறு சரவணனிடம் சிறுமியின் பெற்றோர் கூறிவிட்டு வெளியே சென்றனர். அப்போது, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி அச்சிறுமியை சரவணன் பாலியல் வன்கொடுமை செய்துள் ளார். சில மாதங்களில் அச்சிறுமி கர்ப்பமானது தெரிய வந்ததை யடுத்து, பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் சரவணனை கைது செய்தனர். மேலும், அச்சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்ததையடுத்து, அவர் காப்பகத்தில் ஒப்படைக்கப் பட்டார். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் சசிரேகா ஆஜரானார். வழக்கை நீதிபதி ஜி. சுந்தர்ராஜன் விசாரணை செய்து, சரவணனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்தார்.