பாரிஸ், ஜூன் 30- 17 வயது சிறுவனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததைக் கண்டித்து நடக்கும் போராட்டங்கள் பிரான்சில் தொடர்கின்றன. போக்குவரத்துக் காவல்துறையினரின் பரிசோதனையின்போது இந்த 17 வயது சிறுவன் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு கொல்லப்பட்டவர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் என்பதுதான் காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இரண்டாவது நாளாக பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் குவிந்தவண்ணம் இருக்கிறார்கள். இந்தப் போராட்டங்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். சிறுவனைக் கொலை செய்ததற்கு எந்தவித காரணமும் சொல்ல முடியாது என்றும், மன்னிக்க முடியாதது என்றும் பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனால், மக்களின் கோபத்தைக் கட்டுப்படுத்த வன்முறையை ஏவிவிடுவதற்கு அவர் எதிர்ப்பு காட்டவில்லை. காவல்துறையின் வன்முறை மக்களின் கோபத்தை மேலும் தூண்டிவிட்டிருக்கிறது. இனவெறி சார்ந்த நடவடிக்கை இது என்று பிரான்சில் உள்ள மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இத்தகைய தாக்குதல் முதன்முறையாக நடக்கவில்லை என்றும், தொடர்கதையாகி விட்டன என்றும் கூறியுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளை மக்ரோன் மறுத்துள்ளார். ஆனால், பல சம்பவங்களை இந்த அமைப்புகள் சுட்டிக்காட்டி இனவெறி மன நிலை இருப்பதை அம்பலப்படுத்தியுள்ளன.பாரிஸ், ஜூன் 30- 17 வயது சிறுவனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததைக் கண்டித்து நடக்கும் போராட்டங்கள் பிரான்சில் தொடர்கின்றன. போக்குவரத்துக் காவல்துறையினரின் பரிசோதனையின்போது இந்த 17 வயது சிறுவன் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.
இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு கொல்லப்பட்டவர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் என்பதுதான் காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இரண்டாவது நாளாக பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் குவிந்தவண்ணம் இருக்கிறார்கள். இந்தப் போராட்டங்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். சிறுவனைக் கொலை செய்ததற்கு எந்தவித காரணமும் சொல்ல முடியாது என்றும், மன்னிக்க முடியாதது என்றும் பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனால், மக்களின் கோபத்தைக் கட்டுப்படுத்த வன்முறையை ஏவிவிடுவதற்கு அவர் எதிர்ப்பு காட்டவில்லை. காவல்துறையின் வன்முறை மக்களின் கோபத்தை மேலும் தூண்டிவிட்டிருக்கிறது. இனவெறி சார்ந்த நடவடிக்கை இது என்று பிரான்சில் உள்ள மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இத்தகைய தாக்குதல் முதன்முறையாக நடக்கவில்லை என்றும், தொடர்கதையாகி விட்டன என்றும் கூறியுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளை மக்ரோன் மறுத்துள்ளார். ஆனால், பல சம்பவங்களை இந்த அமைப்புகள் சுட்டிக்காட்டி இனவெறி மன நிலை இருப்பதை அம்பலப்படுத்தியுள்ளன.