திருவனந்தபுரம், ஜுன் 26- அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களுக்கு தற்போதைய இலவச வெளி நோயாளி சிகிச்சை தொடரும். மெடிசெப் அமலுக்கு வந்தபோதிலும் புறநோயாளி களுக்கான இலவச சிகிச்சை நிறுத்தப் படவில்லை. தற்போதைய முறையின் கீழ், புறநோயாளி சிகிச்சைக்கான கட்ட ணங்கள் மற்றும் மருத்துவரின் சான்றி தழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித் தால் அதற்கான தொகையை அரசே திருப்பிச் செலுத்தும். புறநோயாளி சிகிச்சைக்கான செலவை மருத்துவ காப்பீடு ஈடுசெய்யாததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மெடிசெப் என்பது முற்றிலும் பண மில்லா சிகிச்சை வசதி. இத்திட்டத்தின் கீழ் 260க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உறுப்பு மாற்று வசதிகளுடன் குறைந்த பட்சம் ஒரு மருத்துவமனையாவது திட்டத்தின் ஒரு பகுதியாகும். மாநிலத் திற்கு வெளியே 15 க்கும் மேற்பட்ட மருத்து வமனைகளை மெடிசெப் அமைக்கும்.
அரை லட்சம் பகுதி நேர ஊழியர்கள்
மெடிசெப் உறுப்பினர்களில் உள் ளாட்சி உட்பட பல்வேறு துறைகளில் துப்புரவுப் பணிகளைச் செய்யும் பகுதி நேர ஊழியர்களும் அடங்குவர். அரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன டைவார்கள். இதுவரை இந்த வகையின ருக்கு மருத்துவத் திருப்பிச் செலுத்துதல் (ரீஇம்பேர்ஸ்மென்ட்) உள்ளிட்ட பலன் கள் கிடைக்கவில்லை. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதா ரர்களின் பிரீமியத்தை அரசாங்கம் நான்கு தவணைகளில் காப்பீட்டு நிறு வனத்திற்கு முன்கூட்டியே செலுத்தும். இதற்காக தலா ரூ.500 வீதம் 12 தவணை களில் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். ஊழி யர்களின் ஜூன் மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்வது தொடங்கும். ஜூலை மாத ஓய்வூதியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும். ஒரு நபருக்கு ஆண்டு பிரீமியம் தொகை ரூ.4,800. இதில் 18 சதவிகிதம் ஜிஎஸ்டியாக ரூ.864 உறுப்பினரிடம் இருந்து வசூலிக்கப்படும் ரூ.6 ஆயிரத்தில் மீதமுள்ள ரூ.336 கார்பஸ் நிதிக்கு மாற்றப்படும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உட்பட பல தீவிர நோய்களுக்கு சிகிச்சையளிக்க இது பயன்படுத்தப்படும். முதற்கட்ட நிதியில், ரூ.35 கோடி ஒதுக்கப்படும். இந்த நிதியில் உள்ள பணம் தீர்ந்து போனாலும் சிகிச்சை நிறுத் தப்படாது. காப்பீட்டு நிறுவனத்தால் செய்யப்படும் கூடுதல் செலவுகளை அரசாங்கம் திருப்பிச் செலுத்தும். ஜூலை 1 முதல், உறுப்பினர்கள் இணையதளத்தில் இருந்து தங்கள் மருத்துவ காப்பீட்டு அட்டைகளை பதி விறக்கம் செய்ய முடியும். முத்தரப்பு குறை தீர்க்கும் ஏற்பாடும் உள்ளது. இதன் நோடல் அலுவலகம் நிதித்துறை யின் கீழ் செயல்படும். திங்கள் (ஜுன் 27) முதல் அழைப்பு மையமும் செயல்படும்.