கொச்சி, ஜுன் 5- லட்சத்தீவுவாசிகளின் பயணத்துயரம் தீரவில்லை. எம்வி கோரல்ஸ் என்கிற பயணிகள் கப்பல் சனியன்று தீவுக்கு புறப்பட்டது. ஆனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் கொச்சியில் சிக் கித் தவித்து வருகின்றனர். பயணிகளின் கடும் எதிர்ப் பைத் தொடர்ந்து வெள்ளிக் கிழமை வரையிலான பயண அட்டவணையை லட்சத்தீவு அதிகாரிகள் வெளியிட்டுள்ள னர். சனிக்கிழமை புறப்பட்ட இந்த கப்பலில் 400 பயணிகள் இருந்தனர். தற்போதைய அட்டவணைப்படி அரபிக் கடல் கப்பல் 250 பயணிகளு டன் ஞாயிறன்று (ஜுன் 5) புறப்பட்டது. இரண்டு கப்பல் கள் மட்டும் இருந்தால் பய ணப் பிரச்சனை தீராது என் கின்றனர் தீவுவாசிகள்.அடுத்த வெள்ளிக்கிழமை வரை டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. இருப்பினும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் தீவுக்கு செல்ல முடியாமல் கொச்சியில் தவித்து வருகின்றனர். அவர் களில் பெரும்பாலானோர் சிகிச்சை மற்றும் கல்விக்காக கொச்சிக்கு வந்தவர்கள். ஏழு கப்பல்களைக் கொண்டிருந்த லட்சத்தீவில் இப்போது இரண்டு கப்பல் கள் மட்டுமே சேவையில் உள்ளன. இரண்டு கப்பல் களும் கொச்சியில் இருந்து ஐந்து தீவுகளுக்குப் புறப் பட்டு ஆறு நாட்கள் கழித்து கொச்சிக்குத் திரும்பு கின்றன. இந்த காலகட்டத் தில் கொச்சியில் பயணி களின் எண்ணிக்கையும் அதி கரித்து விடும். இதற்கிடை யில், சனிக்கிழமை புறப்பட்ட எம்வி கோரல்ஸ் சேவை சுருக்கப்பட்டு செவ்வாய்க் கிழமை திரும்பும் என்று அதி காரிகள் தெரிவித்தனர்.