states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரங்கள் பற்றிய  தரவுகளை வெளியிட்டுள்ளது. இது ஜனநாயகத்து க்கும் வெளிப்படை தன்மைக்கும் கிடைத்த வெற்றி. யார்  யாருக்கு எவ்வளவு நன்கொடை  தந்தார்கள் என்ற விவ ரங்கள் தெரிவதற்கு சில நாட்கள் ஆகும்.  பியூச்சர் கேமிங் மார்ட்டின் லாட்டரி நிறுவனம் அதிகபட்ச மாக ரூ.1368 கோடி நன்கொடை தந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மீது 2022 தொடங்கி 2023 வரை அமலாக்கத் துறை ரெய்டுகள் நடத்தப்பட்டன. பிறகு என்ன நடந்தது? இதற்கான பதிலை தேடினால் மேலும் பல ரகசியங்கள் வெளியில் வரும். அரசியல் அமைப்பு சட்ட பிரிவுகள் 83/172/324/325  திருத்தப்பட வேண்டும் என்று “ஒரே நாடு ஒரே தேர்தல்” குழு பரிந்துரைத்துள்ளது. இது முற்றிலும் ஜனநாயக விரோதமானது. அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரானது. இந்திய குடியரசின் மாண்புகள் காக்கப்பட வேண்டும் என நினைப்பவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு இதனை கடுமையாக எதிர்க்க வேண்டும் .