சென்னை, ஏப்.27- சென்னை தலைமை செயலக காலனி காவல்நிலையத்தினர் கெல்லீஸ் சிக்னல் சந்திப்பு அருகே வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தபோது பட்டினப் பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ், திருவல்லிக் கேணியை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் பிடிபட்டனர். இவர்களில் விக்னேஷ் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக சட்டப் பேரவையில் பல்வேறு கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விக்னேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளி யிட்டார். இதற்கிடையே இந்த வழக்கு விசா ரணை சி.பி.சி. ஐ.டி.க்கு மாற்றம் செய்யப் பட்டது. புதனன்று புகாலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங் கினர். தலைமை செயலக காலனி போலீ சாரிடம் விசாரணை நடத்தி விக்னேஷ் மரணம் தொடர்பாக தகவல்களை திரட்டி வருகிறார்கள். விக்னேஷ் மரணம் தொடர்பாக உதவிஆய்வாளர், காவலர் ஊர்க் காவல் படை வீரர் ஆகியோர் ஏற்கனவே பணியிடைநீக்கம் செய்யப்பட்டி ருப்பது குறிப்பிடத்தக்கது.