தென்காசி, ஜூன் 14- தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள சாலைப்புதூரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (35). இவர் நெல்லை-தென்காசி 4 வழிச்சாலையில் ஆலங்குளத்தை அடுத்த நல்லூர் விலக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனத்தில் சைக்கிளில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் ரூ.500 நோட்டுகள் சிதறிக்கிடந்தன. அந்த நோட்டுகளை சேகரித்து எண்ணிப் பார்த்ததில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது. இதையடுத்து, அருகி லிருந்த ஆலங்குளம் காவல்நிலை யத்திற்கு தனது குடும்பத்துடன் சென்றார். அங்கு பணியிலிருந்த காவல் நிலைய எழுத்தரிடம் ஒப்படைத்தார். அந்த தம்பதியின் நேர்மையை அங்கிருந்த காவலர்கள் பாராட்டினர். இந்த பணத்திற்கான உரிய ஆவண ங்களை சமர்ப்பித்து சம்பந்தப்பட்ட வர்கள் வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று காவல்துறையினர் தெரிவித் துள்ளனர்.