ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் மார்ச் 22 அன்று வெள்ளிக்கிழமை தனது பிரச்சாரத்தை துவக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து தொகுதிகளுக்கும் செல்கிறார். இதற்கான பயண திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 22 வெள்ளிக்கிழமை திருச்சி, பெரம்பலூர் மக்களவைத் தொகுதிகள்; மார்ச் 23 சனிக்கிழமை தஞ்சை, நாகப்பட்டினம்; மார்ச் 25 அன்று கன்னியா குமரி, திருநெல்வேலி தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
தூத்துக்குடி
மார்ச் 26 அன்று தூத்துக்குடி, இராமநாதபுரம், மார்ச் 27 தென்காசி, விருதுநகர்; மார்ச் 29 தருமபுரி, கிருஷ்ணகிரி; மார்ச் 30 சேலம், கள்ளக்குறிச்சி; மார்ச் 31 ஈரோடு, நாமக்கல், கரூர்.
ஏப். 2 வேலூர், அரக்கோணம்; ஏப். 3 திருவண்ணாமலை, ஆரணி; ஏப்.5 கடலூர், விழுப்புரம்; ஏப்.6 சிதம்பரம், மயிலாடுதுறை; ஏப்.7 புதுச்சேரி;
மதுரை - திண்டுக்கல்
ஏப். 9 செவ்வாய்கிழமை மதுரை, சிவகங்கை; ஏப்.10 தேனி, திண்டுக்கல்; ஏப்.12 திருப்பூர், நீலகிரி; ஏப்.13 கோவை, பொள்ளாச்சி.
சென்னை
ஏப்.15 திருவள்ளூர், வடசென்னை; ஏப்.16 காஞ்சிபுரம், திருபெரும்புதூர்; ஏப்.17 தென்சென்னை, மத்திய சென்னை.
மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் பிரச்சாரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டியுள்ளதால், காலத்தின் அருமை கருதி, எக்காரணம் கொண்டும் வழியில் வேறு எவ்வித நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.