states

தீக்கதிர் விரைவு செய்திகள்

கட்டிட மேற்கூரை விழுந்து பலியான   சிறுமியின் குடும்பத்துக்கு முதல்வர்  நிதியுதவி 

சென்னை,செப்.10- மருதத்தூர் கிராமத்தில், கட்டிட மேற்கூரை விழுந்து  பலியான சிறுமி சுதந்திரதேவி குடும்பத்து க்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அக்குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மருதத்தூர் கிராமத்தில் உள்ள கோவிலில் செப்டம்பர் 10 அன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள கட்டிடத்தின் வெளிப்புற மேற்கூரை  எதிர்பாராதவிதமாக ஸ்ரீமுஷ்ணம் வட்டம், காவனூர் கிராமத்தைச் சேர்ந்த சுதந்திரதேவி (15) என்பவர் மீது இடிந்து விழுந்தது,இதில், அவ ருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக வேப்பூர்  அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழி யில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி யினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்த சுதந்திரதேவியின் பெற்றோ ருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்,  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது 

தருமபுரி,செப்.10-   கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமி ழகத்திற்கான  நீர்திறப்பு  படிப்படியாக குறைக்கப் பட்டு தற்போது வினாடிக்கு 2ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டுள்ளது.  ஒகேனக்கல்லுக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து வினாடிக்கு 6,500 கன அடியாக நீடித்தது.  தற் போது கர்நாடகா அரசு காவிரி ஆற்றில் நீர் திறப்பை குறைத்ததால் ஒகேனக் கல்லுக்கு நீர்வரத்து சரிந்தது.   கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்தியா பெயரை மாற்றுவதற்கு  பிரேமலதா கண்டனம்

மயிலாடுதுறை,செப்.10-  இந்தியாவின் பெயரை மாற்றுவது தவறான முன்னுதாரணமாகிவிடும்.பெயரை மாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது என்று தேமுதிக பொருளாளர் பிரேம லதா விஜயகாந்த் தெரிவித் துள்ளார்.  இதுகுறித்து மயிலாடு துறையில் செய்தியாளர்களி டம் அவர் கூறுகையில்,   “இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவது தவ றான முன்னுதாரணமாகி விடும். ஏனெனில் 75 ஆண்டு காலமாக இந்தியா என்ற  வார்த்தை நம் ஒவ்வொரு வரின் மனதிலும், ரத்தத்தி லும் கலந்துள்ளது. ஒரு குழந்தைக்கு ஒரு பெயரை  வைத்துவிட்டு, 2 வருடங்கள் கழித்து வேறு பெயரால் அழைத்தால் அந்த குழந்தை திரும்பிக் கூட பார்க்காது. இந்த நிலையில் ஒரு நாட்டின் பெயரை அவ்வளவு சுலபமாக மாற்றுவோம் என்று கூறுவது நிச்சயமாக கண்டிக்கத்தக்கது”என்று தெரிவித்தார்.

புலிகள் மர்மச்சாவு:  சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை

ஊட்டி,செப்.10-  ஊட்டி தெற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட எமரால்டு அருகில் நேரு நகர் பாலத்தில் இருந்து அவலாஞ்சி  அணைக்கு செல்லும் நீரோடை மற்றும் அதன் அருகே உள்ள வனப்பகுதியில் 2 புலிகள் மர்மமான முறையில் இறந்துகிடந்தன. இதையடுத்து நீலகிரி வன அதிகாரி கவுதம், ஊட்டி தெற்கு வனச்சரகர் கிருஷ்ணகுமார் மற்றும் வனத்துறையினர் புலிகளின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். புலிகள் இறந்ததற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் உண்மை நிலையை கண்டறிய,  ஊட்டி வனக்கோட்ட தலைமையிட மாவட்ட அலுவலர் தேவராஜ் தலைமையில் வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனகாவலர்கள் என 20 பேர் கொண்ட  சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப் பட்டுள்ளது.  அவர்கள் சம்பவ இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பகம் வனப்பாதுகாவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு புலிகளும் விஷம் கலந்த  தன்ணீரை குடித்து இறந்திருக்க லாமோ என விசாரணை நடத்தி வரு கின்றனர்.  மாதிரிகள் எடுக்கப் பட்டு நச்சுயியல் ஆய்வுக்கு அனுப்பப் படும். பிரேத பரிசோதனைக்கு பின்னரே இறப்பிற்கான உண்மை யான காரணம் தெரியவரும் என்று  கூறப்பட்டுள்ளது.

சி.வி.சண்முகம்  நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

விழுப்புரம்,செப்.10-  விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நாட்டார்மங் கலத்தில் மார்ச் 7 அன்று அதிமுக பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் மாநிலங்கள வை உறுப்பினரும், முன்னாள் சட்டத் துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழக  அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மதிப்பையும், மாண்பையும் குறைக்கும் வகையில் தரக் குறைவாகவும், அவதூறாகவும் பேசியுள்ளார். எனவே, அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் டி.எஸ்.சுப்பிர மணியம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, வழக்கு விசாரணை அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெறும் என்றும், அன்று சி.வி.சண்முகம் நீதி மன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

தரை தட்டிய மிதவைக் கப்பலை மீட்கும் பணிகள் தீவிரம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான நீராவி உற்  பத்தி கலனை மிதவைக் கப்பல் ஏற்றி வந்தது.     இந்த கப்பல் கூடங்குளம் அணுமின் நிலைய துறைமுகப் பகுதிகளின் நுழைவு வாயில் பகுதி யில் பாறையில் சிக்கியது.  இதனை மீட்கும் பணிகள் சனிக்கிழமை நடை பெற்றது. என்றாலும் காற்றின் வேகம் அதிகமாக  இருந்ததினால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த சூழ்நிலையில் இதற்கான வல்லுனர் குழு வினர் கூடங்குளம் அணுமின் நிலையம் வந்து  உள்ளனர். அவர்கள் இதனை மீட்கும் பணியை  ஞாயிற்றுக்கிழமை காலை முதலே தொடங்கி னர். பாறையில் சிக்கி உள்ள மிதவைக் கப்பலை  இழுப்பதற்கு வல்லுநர் குழுவினர் 3 பரிந்து ரைகளை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வல்லுனர் குழுவினர் கடல் பகு திகளில் இதுபோன்ற கப்பல்கள் சிக்கும் பொழுது அதனை மீட்கும் பணியில் அனுபவம் பெற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் உபரி நீர்த் திட்டம்: பாமக வலியுறுத்தல்'

அரூர், செப்.10- ஒகேனக்கல் உபரி நீர்த்திட்டத்தை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டு க்கொண்டுள்ளார். தருமபுரி மாவட்டம் கடத்தூரில் செய்தி யாளர்களிடம் அவர், கூறுகையில், ‘’ஒகேனக்கல் உபரி நீர்த்திட்டத்தை நிறை வேற்ற வேண்டும் என்பது தருமபுரி மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும். இதற்காக 10 லட்சம் மக்களிடம் கையெழுத்து பெற்று கடந்த ஆட்சியில் முதல்வரிடம் கொடுத்தோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தரும புரி மாவட்டத்தின் அனைத்து வளர்ச்சிக்கும் ஒரு தீர்வாக இத்திட்டம் இருக்கும். காவிரி யில் ஆண்டுதோறும் வீணாக 100 டி.எம்.சி நீர் கடலில் கலந்து வீணாகி வருகின்றது. இத்திட்டத்திற்கு நமக்கு தேவை 3 டி.எம்.சி. மட்டுமே. இதனை உடனடியாக நிறை வேற்ற வேண்டும் என்றார்.

புதுச்சேரி சட்டப்பேரவை  செப்.20 கூடுகிறது

புதுச்சேரி, செப். 10- புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத் தொடர் செப்டம்பர் 20 ஆம் தேதி துவங்குகிறது. புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 20 ஆம் தேதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு  கூட்டப்பட உள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் தயாளன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று பின்னர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது இக்கூட்ட தொடர் நடைபெற உள்ளது. இக்கூட்டத் தொடரில் ரேசன்  கடைகளை திறக்காதது, பொலிவுபெறும்  திட்டத் பணிகள்  நடைபெறுவதில் நடந்துள்ள முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை திமுக, காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் எழுப்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ்மாக் கடை சுவரில் துளைபோட்டு மதுபாட்டில்கள் கொள்ளை 

மதுராந்தகம்,செப்.10-  செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அருகே உள்ள பழவூரில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது.  சனிக்கிழமை இரவு விற்பனை முடிந்த தும் ஊழியர்கள் மதுக்கடையை பூட்டிச் சென்றனர். இந்த நிலையில் ஞாயிறன்று  அதி காலை மதுக்கடையின் பின்பக்க சுவரில் துளை போடப்பட்டு இருப்பதை கண்டு அவ் வழியே சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்த னர். மேலும் மதுபாட்டில்களும் உடைக்கப் பட்டு சிதறி கிடந்தன. பெட்டியுடன் மது பாட்டில்களும் கிடந்தது.   இதுபற்றி அறிந்ததும் சித்தாமூர் காவல்துறையினர் வந்து விசாரணை நடத்தி னர். நள்ளிரவு வந்த மர்ம கும்பல் மதுக்கடை யின் பின்பக்க சுவரில் துளை போட்டு  புகுந்து பெட்டி, பெட்டியாக மது பாட்டில்களை அள்ளிச்சென்று இருப்பது தெரியவந்தது. வெளியே எடுத்து வந்த சில மதுபாட்டில்களை கொண்டு செல்ல முடியா ததால் கொள்ளை கும்பல் அதனை அங்கேயே உடைத்தும் பெட்டியுடன் மது பாட்டிலை விட்டும் சென்றுள்ளனர். கடை யின் உள்ளே இருந்த லாக்கரில் 2 நாட்கள் விற்பனை பணம் ரூ.3 லட்சம் இருந்தது. அந்த லாக்கரை கொள்ளை கும்ப லால் உடைக்க முடியாததால் மதுபாட்டில் களை மட்டும் அள்ளிச்சென்றனர்.  இதனால் அங்கிருந்த ரூ.3 லட்சம் தப்பியது. இது குறித்து சித்தாமூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளை கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர்.

சுரங்கப்பாதை பணி காரணமாக  14 ரயில்கள் ரத்து 

சென்னை, செப்.10- தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-  ஜோலார்பேட்டை- கே. எஸ்.ஆர். பெங்களூரு மார்க் கத்தில், ஜோலார்பேட்டை- சோமநாயக்கன் பட்டிக்கு  இடையே சுரங்கப்பாதை பணி காரணமாக 14 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.  சென்னை சென்ட்ரல்-திருப்பதிக்கு வருகிற 12, 13, 14, 15, 20, 21, 23, 25 ஆகிய தேதிகளில் மாலை 4.35 மணிக்கு இயக்கப்படும் ரயில் (16203), திருப்பதி- சென்னை சென்ட்ரலுக்கு 12, 13,14, 15, 21, 22, 24, 25 ஆகிய தேதி களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (16204), சென்னை  சென்ட்ரல்- மைசூருக்கு 12, 13, 14, 20, 21, 23, 24 ஆகிய தேதிகளில் இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் (16021), மைசூரு- சென்னை சென்ட்ரலுக்கு 13, 14, 15, 21, 22, 24 25 ஆகிய தேதி களில் இரவு 9 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (16022) உள்பட 14 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இது தவிர, 6 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல்- கே.எஸ்.ஆர். பெங்களூ ருவுக்கு 12-ந்தேதி இரவு 10.50 மணிக்கு புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் (12657) ஒன்னரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும். இது தவிர 6 ரயில்கள் குறிப்பிட்ட நாட்களில் நேரம் மாற்றி இயக்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.