ஹைதராபாத்,டிச.26- இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்கா மல் தடுக்க சில பன்னாட்டு மருந்து நிறு வனங்கள் முயற்சி செய்ததாக உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா குற்றம்சாட்டினார். ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நீதிபதி என்.வி.ரமணா பேசுகையில், பாரத் பயோடெக் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின், கொரோ னா மற்றும் அதன் புதிய திரிபுகளுக்கு எதிராக சிறப்பாக பலனளிக்கக் கூடியது. இந்தியா கண்டுபிடித்த தடுப்பு மருந்துக்கு உலக சுகா தார அமைப்பின் அங்கீகாரம் கிடைப்பதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கோவாக்சினுக்கு எதிராக ஃபைசர் மற்றும் சில பன்னாட்டு நிறுவனங்களும் சில உள்நாட்டினரும் நியாயமற்ற முயற்சிகளை மேற்கொண்டனர் என்று தெரிவித்தார்.