- ஜூலை 8-ம் தேதி மேக வெடிப்பு, வெள்ளப்பெருக் கால் கூடாரங்கள் அடித் துச் செல்லப்பட்டதில் 16க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந் நிலையில், கடந்த 2 நாட் களாக நிறுத்தப்பட்டி ருந்த அமர்நாத் புனித யாத்திரை திங்களன்று மீண்டும் தொடங்கியது. பஞ்சர்னி மார்க்கத்தில் அமர்நாத் யாத்திரை தொடங்கியுள்ள நிலை யில், பால்டால் வழியே செல்லத்தடை விதிக்கப் பட்டுள்ளது.
- காவிரி ஆணைய கூட்டத் தில் மேகதாது பற்றி விவாதிக்க தடை கோரிய வழக்கு அடுத்தவாரம் விசாரணைக்கு வரும் என உச்சநீதிமன்றம் அறி வித்துள்ளது. விவாதிக்க தடை கோரி தமிழக அரசு தொடர்ந்த மனு அடுத்த செவ்வாயன்று விசாரிக் கப்படும் என உச்சநீதி மன்றம் தெரிவித்துள் ளது. வழக்கை விசாரிக்க வேண்டாம் என கர்நாட கா தரப்பு வைத்த கோரிக் கையை நீதிபதிகள் நிரா கரித்துள்ளனர்.
- நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை தண்டனை உச்சநீதிமன்றம் விதித்துள் ளது. மேலும் ரூ.4 கோடி டாலர் பணத்தை வட்டி யுடன் 4 வாரத்துக்குள் செலுத்த விஜய் மல்லை யாவுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
- சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அஸ்ஸாத் மற்றும் ஈரானின் ஜனாதிபதி இப்ராகிம் ராய்சி ஆகிய இருவரும் தொலைபேசி வாயிலாகப் பேசியிருக்கிறார்கள். முக்கியமான பல்வேறு துறைகளில் உடன்பாடுகளை எட்டுவதன் மூலம் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது என்று இருவரும் முடிவெடுத்துள்ளனர். ஏற்கனவே போடப்பட்டுள்ள உடன்பாடுகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தும் வேலையை முதலில் செய்வது என்ற முடிவையும் எட்டியுள்ளனர்.
- கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் பிரான்ஸ் பத்தாவது இடத்தை எட்டியுள்ளது. பிரான்சின் அரசு சுகாதார முகமை வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின்படி இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தைத் தொட்டிருக்கிறது. புதிய தொற்றும் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
- ஜப்பானின் மேல்சபைத் தேர்தலில் ஆளும்கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் நடைபெற்ற 125 இடங்களில் 63 இடங்களில் ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை 109 இடங்களைப் பெற்றிருந்த ஆளும்கட்சி தற்போது 110 இடங்களை வென்றுள்ளது. சின்சோ அபேயின் கொலை, ஆளும்கட்சிக்கு அனுதாப வாக்குகளைப் பெற்றுத் தந்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.