states

பண்டிட்டுகளின் துயரத்தை பயன்படுத்தி மதவெறியைத் தூண்டிவிடும் ஜக்கி வாசுதேவ்!

புதுதில்லி, பிப். 28 - “இந்தியாவின் ஒவ்வொரு நகரிலும் ‘காஷ்மீர்’ என்ற பெயருடன் கூடிய தெரு அல்லது சதுக்கம் இருக்க  வேண்டும்” என காஷ்மீரி பண்டிட்டுகளின்  மாநாட்டில் சாமியார் ஜக்கி வாசுதேவ், ஆர்எஸ்எஸ் அரசியலை திணித்துள்ளார். “காஷ்மீரி பண்டிட்டுகளின் வலி குறித்து, அனைத்து இந்தியர்களும் அறிந்து கொள்ளும் வகையில், 10 நிமிட மற்றும் 20 நிமிட குறும்படங்களை எடுத்தும் வெளியிட வேண்டும்” என்று கிளறி விட்டுள்ளார். புலம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்கள், ‘உலக காஷ்மீரி பண்டிட் புலம்பெயர்ந்தோர் கூட்டமைப்பு (Global Kashmiri Pandit Diaspora) என்ற அமைப்பை தொடங்கி உள்ளனர். இந்த அமைப்பின் மாநாட்டில் சாமியார் ஜக்கி வாசுதேவ் பங்கேற்றுப் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “உலகளவில் காஷ்மீரி பண்டிட்கள் மீதான கருத்துருவாக்கத்தை மாற்ற வேண்டியது மிகவும் அவ சியம். குறைந்தபட்சம் இந்தியாவில் வாழும் அனைத்து இந்தியர்களும் நம்முடைய காஷ்மீரி பண்டிட்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அவலங்களை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். தனி நபராக வும் குடும்பமாகவும் நீங்கள் சந்தித்த வலிகளை 10 முதல் 20 நிமிட குறும்படங்களாக தயாரித்து வெளியிட  வேண்டும். இதற்கு திரையரங்குகள் தேவையில்லை.  நம் அனைவரிடமும் மொபைல் போன்களும், கம்ப்யூ ட்டர்களும் உள்ளன. இந்த தொழில்நுட்பங்களே போதுமானது.

மேலும், “காஷ்மீரின் பூர்வகுடிகளான காஷ்மீர் பண்டிட்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதிகளை யும், அவலங்களையும் இந்தியாவில் வாழும் ஒவ்வொரு வரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக, இந்தியா முழுவதும் ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் ‘காஷ்மீர்’ என்ற பெயருடன் கூடிய தெருவோ, சதுக்க மோ, வட்டமோ அல்லது காஸ்யப்ப மலையோ, சிகரமோ  இடம்பெற செய்வதற்கு ஒன்றிய அரசிற்கு கோரிக்கை விடுக்க வேண்டும்” எனவும் ஜக்கி வாசுதேவ் உசுப்பேற்றியுள்ளார். “இந்தியாவின் தென் பகுதிகளில் நீங்கள் ‘காஷ்மீர் தினம்’ என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து தருகிறோம். அந்நிகழ்ச்சி மூலம் உங்க ளுடைய கலை, இலக்கியம், இசை என அனைத்தை யும் பிற மக்கள் அறிந்து கொள்ளட்டும். உங்களுடைய கதைகள் வலிகளுடன் மட்டும் நின்று விடாமல், காஷ்மீர் கலாச்சாரத்தின் அழகையும், உங்களுக்குள் இருக்கும் துடிப்பான அதிர்வுகளையும் வெளிப்படுத்தும் வண்ணம் இருக்க வேண்டும். காஷ்மீர் கருத்துருவாக்கத்தை மீண்டும் பேச வேண்டிய நேரமிது. காஷ்மீர் இளைஞர்கள் இந்தப் பொறுப்பை கையிலெடுக்க வேண்டும். காஷ்மீரின் தலையெழுத்தை மாற்றி எழுத வேண்டும்” என்றும் வெறியை ஊட்டியுள்ளார்.