சென்னை, மே 5- மனிதனை மனிதன் பல்லக்கு தூக்குவ தற்கான தடை தொடர வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு; பட்டினபிரவேசம் மற்றும் பிரம்ம ரதம் என்ற பெயரில் ஆதீன கர்த்தாக்களை மனிதர்கள் பல்லக்கில் தூக்கிச் செல்லும் நடைமுறை நவீன காலத்திற்கு ஒவ்வாததாகும். மேலும், தனி மனித கௌரவத்திற்கு இழுக்கானது மட்டு மின்றி அடிமைத்தனத்தின் சின்னமாகும். இறை நம்பிக்கை என்கிற பெயரில் பெரும் மடங்களை நிர்வகிக்கும் ஆதீன கர்த்தாக்கள் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கு இவ்வாறு பல்லக்கில் அமர்ந்து கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஊர்வலம் வருவதும், வழியில் உள்ள பக்தர்களுக்கு பணம் மற்றும் திருநீறு வழங்கி வருவதையும் நடைமுறையில் பின்பற்றி வந்தனர். ஆனால், காலப்போக்கில் தமிழகத்தில் உள்ள பல மடங்களில் இந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளது. குன்றக்குடி அடிகளார் இந்த நடைமுறையை, மனிதர்களை இழிவு செய்கின்ற காரணத்தினால் பல ஆண்டு களுக்கு முன்னால் நிறுத்திவிட்டார். அதே போல, ஸ்ரீரங்கம் கோவிலில் பிரம்ம ரதம் தூக்கிச் செல்லும் நடைமுறை எதிர்ப்பு கிளம்பி யதால் கைவிடப்பட்டது. திருவாவடுதுறை ஆதீ னத்திலும் இந்த நடைமுறை சில ஆண்டுகளாக இல்லை.
சென்னை, மே 5- மனிதனை மனிதன் பல்லக்கு தூக்குவ தற்கான தடை தொடர வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு; பட்டினபிரவேசம் மற்றும் பிரம்ம ரதம் என்ற பெயரில் ஆதீன கர்த்தாக்களை மனிதர்கள் பல்லக்கில் தூக்கிச் செல்லும் நடைமுறை நவீன காலத்திற்கு ஒவ்வாததாகும். மேலும், தனி மனித கௌரவத்திற்கு இழுக்கானது மட்டு மின்றி அடிமைத்தனத்தின் சின்னமாகும். இறை நம்பிக்கை என்கிற பெயரில் பெரும் மடங்களை நிர்வகிக்கும் ஆதீன கர்த்தாக்கள் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கு இவ்வாறு பல்லக்கில் அமர்ந்து கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஊர்வலம் வருவதும், வழியில் உள்ள பக்தர்களுக்கு பணம் மற்றும் திருநீறு வழங்கி வருவதையும் நடைமுறையில் பின்பற்றி வந்தனர். ஆனால், காலப்போக்கில் தமிழகத்தில் உள்ள பல மடங்களில் இந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளது. குன்றக்குடி அடிகளார் இந்த நடைமுறையை, மனிதர்களை இழிவு செய்கின்ற காரணத்தினால் பல ஆண்டு களுக்கு முன்னால் நிறுத்திவிட்டார். அதே போல, ஸ்ரீரங்கம் கோவிலில் பிரம்ம ரதம் தூக்கிச் செல்லும் நடைமுறை எதிர்ப்பு கிளம்பி யதால் கைவிடப்பட்டது. திருவாவடுதுறை ஆதீ னத்திலும் இந்த நடைமுறை சில ஆண்டுகளாக இல்லை.