states

பேனா நினைவு சின்னம்; எதிர்ப்பவர்களின் வாதம் ஏற்கக் கூடியதல்ல : கே.எஸ்.அழகிரி

சென்னை, பிப். 5- வள்ளுவருக்கு குமரியில் சிலை அமைத்த கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் எழுப்புவதை எதிர்ப்பவர்களின் வாதம் எந்தவகையிலும் ஏற்கக் கூடியதல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கருணாநிதியின் நினைவாக,மெரினா கடற்கரையில் பேனா சின்னம் அமைக்கப் படும் என்று தமிழ்நாடு அரசுஅறிவித்தது. இதனைத்தொடர்ந்து, இந்ததிட்டத்திற்கு சில அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்புகள் எதிர்ப்பு  தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், “13 வயதில் அரசிய லில் பிரவேசம் செய்து 95 வயது வரை தமிழ்ச் சமுதாயத்திற்காக அல்லும் பகலும் அயராது உழைத்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, எழுத்தாற்றல் மூலம் ஆற்றிய மகத்தான தொண்டை போற்றுகிற வகை யில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக் கப்பட உள்ளது. இதை உள்நோக்கத்தோடு எதிர்த்து கருத்துகள் கூறப்படுவதை தமிழ் நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட் பக்கழக ஆராய்ச்சியாளர் குழு கடந்த ஒரு மாத காலம் நினைவுச் சின்னம் அமைக்கப்பட வுள்ள கடற்கரை பகுதியில் அதிகாலையில் ஆய்வு செய்து அங்கு ஆமைகளோ, மீன்களோ இல்லை என்று அறிக்கை வழங்கி யுள்ளது. வான்புகழ் கொண்ட வள்ளு வனுக்கு 133 அடி உயரத்தில் குமரி முனை யில் திருவுருவச் சிலை அமைத்த கலைஞ ருக்கு பேனா நினைவுச் சின்னம் எழுப்பு வதை எதிர்ப்பவர்களின் வாதம் எந்தவகை யிலும் ஏற்கக் கூடியதல்ல என்று குறிப் பிட்டுள்ளார்.