states

துணைவேந்தர்கள் நியமனம் மாநில அரசின் உரிமை : மு.க.ஸ்டாலின்

சென்னை,ஏப்.25- துணைவேந்தர்களை நியமிக்கும்  உரிமை மாநிலத்திற்கு உட்பட்டது என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை மாநில அரசே நிய மிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் திங்களன்று (ஏப்.25)  கொண்டு வரப்பட்ட சட்டமுன் வடிவை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது வருமாறு:- தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின்கீழ் 13 பல்கலைக்கழகங் கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு  வேந்தராக ஆளுநரும், இணை வேந்தராக உயர்கல்வித் துறை அமைச்சரும் செயல்படுவதால், கொள்கை முடிவுகளை எடுக்கக் கூடிய அரசுக்குப் பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் இல்லாமல் இருப்பது உயர்கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மாநில அரசின், அதாவது மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலந்தாலோசித்து ஆளுநர் துணை வேந்தரை நியமிப்பது மரபாக இருந்து வந்துள்ள நிலையில், அண்மைக் காலமாக இந்த நிலை யில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப் பாக, கடந்த நான்கு ஆண்டுகளில் பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் நியமனத்தில், ஆளுநர் தனக்கு மட்டுமே பிரத்யேகமான உரிமை என்பது போல் செயல்பட்டு, உயர்கல்வியை அளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கு தலைதூக்கியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால், அதன்கீழ் செயல்படும் பல்கலைக்கழகத்திற்குத் துணை வேந்தரை நியமிக்க முடியவில்லை என்பது, ஒட்டுமொத்தப் பல்கலைக் கழக நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்துகிறது. இச்செயல் மக்களாட்சின் தத்து வத்திற்கே விரோதமாக இருக்கிறது.

“ஒன்றிய - மாநில அரசு உறவுகள்” குறித்து ஆராய 2007-ல் நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணை யம் அளித்துள்ள பரிந்துரையில், “அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத துணை வேந்தர் நியமன அதிகா ரத்தை ஆளுநருக்கு அளிக்கக் கூடாது” என்று பரிந்துரைத்துள்ளது. இதற்கு காரணம் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகா ரம் ஆளுநர்களிடம் இருந்தால், அது சர்ச்சைகளுக்கும், விமர்சனங்க ளுக்கும் உள்ளாகும். பல்கலைக் கழக கல்வியில் மாநில அரசு இயற்கையிலேயே ஆர்வமாக அக்கறையுடன் இருக்கும் சூழலில், ஆளுநரிடம் இதுபோன்ற அதிகாரத்தைக் கொடுப்பது மாநில  அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே  அதிகார மோதலுக்கு வித்திடும்  என்றும் பூஞ்சி ஆணையம்  தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கி றது. துணை வேந்தர் நியமனம் மாநில அரசின் உரிமை தொடர்புடைய பிரச்சினை. மாநிலத்தின் பல்கலைக் கழகக் கல்வியுரிமை தொடர்பான பிரச்சினை. மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசின் உரிமை. ஆகவே, அரசு கொண்டு வந்திருக்கும் இந்த  சட்டமுன்வடிவை எதிர்த்து பாஜகவி னர் வெளிநடப்பு செய்திருக்கிறார் கள். ஆனால், குஜராத்தில் மாநில அரசுதான் துணை வேந்தரை நிய மிக்கிறது.  அதேபோல், “பூஞ்சி ஆணைய” பரிந்துரையை ஏற்கலாம் என 2017-இல் அதிமுக ஆட்சியிலும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிமுகவும் இதை ஆதரிப் பதில் நெருடல் இருக்க வாய்ப்பே கிடையாது. இவ்வாறு முதலமைச்சர் தெரி வித்தார்.