சென்னை, ஜூன் 14- கோடைவிடுமுறை முடிந்து 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் புதனன்று (ஜூன் 14) பள்ளிகளுக்கு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் பல்வேறு வடிவங்களில் வரவேற்றனர். கோடை விடுமுறைக்கு பிறகு, 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதன்கிழமை (ஜூன் 14) பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் ஏப்ரல் மாதங்க ளில் நடந்தது. அதைத் தொடர்ந்து கீழ் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் வரை நடந்தது. தமிழ்நாடு முழுவதும் மே 1 ஆம் தேதி முதல் கோடை விடு முறை அறிவிக்கப்பட்டது. கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டு, 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்க ளுக்கு ஜூன் 12 ஆம் தேதியும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஜூன் 14 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தனியார் பள்ளி களும் இதே நாளில் திறக்கப்படவேண் டும் என்று அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து, திங்களன்று (ஜூன் 12) 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை யிலான பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து, இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். இந்நிலையில், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதனன்று (ஜூன் 14) பள்ளிகள் திறக்கப்பட்டது. அரசு, உதவி பெறும் பள்ளிகள், தனி யார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள், இது தவிர எல்கேஜி, யுகேஜி படிக்கும் குழந் தைகளுக்கும் வகுப்பு நடைபெற்றது. பள்ளிக்கு வந்த குழந்தைகளை உற்சாகப்படுத்துவதற்காக சில பள்ளிகளில் மிக்கிமவுஸ், ஜோக்கர் என குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களை போன்று வேடம் அணிந்தும் உற்சாக இமோஜி வரைபடங்களை கொண்டும், ரோஜாப் பூ மற்றும் இனிப்புகள் வழங்கி குழந்தை களை பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்ற னர்.