states

மகா கோடீஸ்வரர்கள் மீது வரி விதியுங்கள்

புதுதில்லி, ஜூலை 17 - அதிதீவிரமாக அதிகரித்து வரும் வேலையின்மை, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்த பொது முதலீடுகளை மேற்கொள்வதற்கு மகா கோடீஸ்வரர்கள் மீது வரி விதித்திட வேண்டும் என ஒன்றிய மோடி அரசை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் புது தில்லியில் ஜூலை 16 அன்று நடை பெற்றது. அதன்பின்னர் அது வெளி யிட்ட அறிக்கை வருமாறு: உலக வங்கியின் தரவுகள், இந்தியப் பொருளாதாரத்தின் ஆண்டு வளர்ச்சி என்பது 2020-222ஆம் ஆண்டு களில் வெறும் 0.8 விழுக்காடு என்று காட்டுகிறது.

வேலையின்மை

இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையத்தின் (CMIE) 2022 ஜனவரி-ஏப்ரலுக்கான அறிக்கையின்படி, 20-24 வயதுக்கு இடையேயுள்ள இளைஞர்களின் வேலையின்மை 2 கோடிக்கும் அதிகம்  என்றும், இது வேலையின்மை விகி தத்தில் 42 விழுக்காடு என்றும் குறிப் பிட்டிருக்கிறது. 25-29 வயதுக்கு இடையேயுள்ள இளைஞர்களின் வேலையின்மையான 12.72 விழுக்காடு வேலையின்மை விகிதத்தைவிட ஆறு  லட்சம் பேர் அதிகமாகும். இரண்டை யும் சேர்த்தால் நாட்டின் வேலையில்லா  இளைஞர்களில் சுமார் 80 விழுக்காட்டி னர் (3 கோடிக்கும் மேலானவர்கள்) –வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.    இந்தியாவில் வேலை செய்வதற்குத் தகுதியான மக்கள்தொகையினர் ஒட்டுமொத்தத்தில் 36 விழுக்காடாகும். இதில் 61.2 விழுக்காட்டினர் வேலை தேடு வதை நிறுத்திக்கொண்டுவிட்டனர். தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Labour Participation Rate) எப்போதும்  இல்லாத அளவிற்கு 38.8 விழுக்காடாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

பாய்ச்சல் வேகத்தில் உயரும் விலைவாசி

ஆண்டு மொத்த விலைவாசிக் குறியீட்டெண் (WPI-Wholesale Price Index) 2022 மே மாதத்தில் 15.8 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. இது 1998க்குப் பிறகு மிக உச்ச அளவாகும். உணவுப் பொருள்களின் விலைகள் 14.4 விழுக்காடாகவும், அடிப்படை இனங்கள் 19.71 விழுக்காடாகவும், எரிபொருள் (fuel) மற்றும் எரிசக்தி (energy) 40.63 விழுக்காடாகவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் (manufacturing products) 10.11 விழுக்காடாகவும் உயர்ந்திருக்கின்றன. இந்த விலை உயர்வுகள் அனைத்தும் நாட்டு மக்களின் வாங்கும்  சக்தியை மேலும் குறைத்து, அவர்கள் மீது மேலும் கடுமையான துன்ப துயரங்களைத் திணித்திருக்கின்றன. உள்நாட்டு கிராக்கி சுருங்கியதன் விளைவாக, உற்பத்திகளும் குறைந்து, வேலையிழப்புகளுக்கும் இட்டுச் சென்றிருக்கிறது.  

ஏற்றத்தாழ்வு மிக மோசமான முறையில் அதிகரிப்பு

மதவெறி-கார்ப்பரேட் கள்ளப் பிணைப்பு, கூட்டுக்களவாணி முத லாளித்துவம் மற்றும் நாட்டின் சொத்துக் களைச் சூறையாடுதல் அனைத்தும் மக்கள் மத்தியில் சமத்துவமின்மையை மிக மோசமான முறையில் அதிகரித் திருக்கிறது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் கம்பெனிகளின் மொத்த லாபங்கள் 2021-22இல் 9.3  லட்சம் கோடிக்கும் மேலாக அதாவது சென்ற ஆண்டைக் காட்டிலும் 70 விழுக் காட்டிற்கும் அதிகமாக மாறியிருக் கிறது. இது கொரோனா பெருந்தொற்று க்கு முந்தைய பத்தாண்டுகளில் (2010- 2022க்கு இடையேயான ஆண்டு களில்) அவர்கள் பெற்ற சராசரி லாபங் களைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.   ஒன்றிய அரசாங்கம் மெகா பணக் காரர்கள் (super rich) மீது வரி விதித்திட வேண்டும், பொது முதலீடுகளை அதிகப்படுத்தி வருவாயைப் பயன் படுத்தி, பொருளாதாரத்தில் உள்நாட்டுத் தேவையைப் பெருக்கி யும், வேலைவாய்ப்பை அதிகப்படுத்தி யும், நமக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டி எழுப்பிட வேண்டும்.