பாட்னா, மார்ச் 18 - தமிழ்நாட்டில் பணிபுரிந்து வரும் இடம்பெயர் தொழிலாளர் குறித்து வதந்தி பரப்பிய யூடியூபர் மணீஷ் காஷ்யப், பீகார் காவல்துறையிடம் சரணடைந் துள்ளார். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இடம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படு வதாக பொய்யான தகவல் பரப்பியவர் களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கையில் தமிழ்நாடு காவல்துறை களமிறங்கியுள்ளது. இது வரை 13 வழக்குகளை பதிவு செய்துள்ள நிலையில், 6 பேரை கைதுசெய்துள்ளது. இந்நிலையில் இடம்பெயர் தொழிலா ளர்கள் குறித்து வதந்தி வீடியோ பரப்பிய வழக்கில் தேடப்பட்டு வந்த பீகாரைச் சேர்ந்த யூடியூபர் மணீஷ் காஷ்யப் காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளார். தமிழ்நாட்டில், இடம்பெயர் தொழி லாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான வீடியோ பதிவிட்ட மணீஷ் காஷ்யப் மற் றும் அவரது கூட்டாளி யுவராஜ் சிங் ஆகி யோருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. கடந்த 15-ஆம் தேதி அவர் கள் இருவருக்கும் சொந்தமான இடங்க ளில் பீகார் காவல்துறை சோதனையும் நடத்தியது. இந்த பின்னணியிலேயே ஜகதீஷ்பூர் காவல் நிலையத்தில் யூடி யூபர் மணீஷ் காஷ்யப் சரணடைந்துள் ளார். அவரை காவலில் எடுத்து விசா ரிக்கவும் பீகார் காவல்துறை திட்ட மிட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் விவ காரத்தில் பீகாரில் மட்டும் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.