states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

‘காவல்நிலையம், புலனாய்வு அலுவலகங்களில் சிசிடிவி’ 

‘அனைத்து காவல் நிலையங்கள், ஒன்றிய புல னாய்வு அமைப்புகளின் அலு வலகங்களில் கட்டாய கண்காணிப்புக் கேமரா  பொருத்துதல் தொடா்பான உத்தரவை ஒரு மாதத்துக் குள் ஒன்றிய - மாநில அரசுகள் நடைமுறைப் படுத்த வேண்டும். இதற்கான பதில் மனுவை மாா்ச் 29-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். இந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை எனில், சம்பந்தப்பட்ட ஒன்றிய அரசின் உள்துறை செயலா், மாநில தலைமைச் செயலாளா்கள் மற்றும் உள்துறை செயலாளா்கள் ஆகியோா் மீது தேவை யான நடவடிக்கை எடுக்க  நேரிடும்’ என்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் சர்க்கரை உற்பத்தி குறையும்

நடப்பு சந்தை ஆண்டில் நம் நாட்டின் சர்க்கரை உற் பத்தி முன்னர் மதிப்பிட்ட தை விட குறைவாகவே இருக் கும் என கணிக்கப்பட்டு உள்ளது. நடப்பு சந்தை ஆண்டில் 3.58 கோடி டன் சர்க்கரை உற்பத்தியாகும் என சர்க்கரை அமைப்புகள் மற்றும் அரசு முகமைகள் மதிப்பீட்டு இருந்தன. ஆனால் கரும்பு பயிர்  முன்கூட்டியே முதிர்ச்சி யடைவது மற்றும் வானிலை  காரணமாக எடை குறைவது போன்ற காரணங்களால் சர்க்கரை உற்பத்தி 3.43 கோடி டன்னாக குறையும் என கணிக்கப்பட்டு உள்ளது.

மேகாலயா: பாஜகவுக்கு துணைபோகும் மம்தா! 

“திரிணாமுல் காங்கிர சின் வரலாறு உங்களுக்கு தெரியும். மேற்கு வங்கத்தில் வன்முறைகள், ஊழல்கள்  அதிகரித்து உள்ளன. அவர்களது பாரம்பரியத்தை நீங்கள் அறிவீர்கள். கோவா தேர்தலில் மிகப்பெரிய தொகையை அவர்கள் செலவழித்தார்கள். பாஜக-வுக்கு உதவுவதற்கே இவ் வாறு செய்தார்கள். இதே திட்டத்தை மேகாலயா விலும் அவர்கள் (திரிணா முல் காங்கிரஸ்) பின்பற்று கிறார்கள். மேகாலயாவில் பாஜக வலுவடைந்து ஆட்சி க்கு வர வேண்டும் என்பதே அந்த கட்சியின் திட்டம்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நெல் ஈரப்பதம்: 1 சதவிகிதம் மட்டுமே உயர்வு

டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக கொள்முதல் செய்யப்  படும் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 22 சதவிகிதம் அளவிற்கு ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதனடிப்படை யில், ஒன்றிய அரசின் குழு டெல்டா மாவட்டங்களில் நடத்திய ஆய்வுக்குப் பின், கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 19 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்த்தி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் ‘மோடி’ வாரியர்ஸ் புத்தகம் கட்டாயம்

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய அறிவுரைகள் அடங்கிய புத்த கம் ‘தேர்வு வாரியர்ஸ்’ என்ற பெயரில் 11 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலை யில், ‘சமாக்ரா சிக் ஷா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளியின் நூலகங்களிலும் ‘தேர்வு வாரியர்ஸ்’  புத்தகங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் ‘மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பிரதமரின் அறிவுரைகளை பெற்று பயன் அடைவார்கள்’ என்று அனைத்து மாநி லங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

பாஜக கூறுவதையே தேர்தல் ஆணையம் செய்கிறது

“தேர்தல் ஆணையமும் மற்ற அமைப்புகளும் ஒன்றிய அரசாங்கத்தில் உள்ள பாஜக விரும்பும் முடிவுகளை வழங்குகின்றன என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்  குற்றம் சாட்டியுள்ளார். ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கு தேர்தல் ஆணையம் சிவசேனா பெயர் மற்றும் சின்னம் ஒதுக்கியதை குறிப்பிட்டு இவ்வாறு அவர் கூறியுள்ளார். பாலாசாகேப் தாக்கரே தனது கடைசி நாட்களில், சிவசேனாவின் பொறுப்பு உத்தவ் தாக்கரேவுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கி, சிவ சேனா மற்றும் அதன் சின்னத்தை வேறு ஒருவருக்கு ஒதுக்கியது. இது அரசியல் கட்சிகள் மீதான பெரிய தாக்குதல்!” என்றும் பவார் குறிப்பிட்டுள்ளார்.'

தேர்தல் நடத்துவதாக ஏமாற்றுகிறார்கள்: பரூக்

“ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து தரப்படும் என்று ஒன்றிய அரசு கூறி வருவது மிகப்பெரிய ஏமாற்று வேலை. ஜம்மு - காஷ்மீர் மக்களையும் உலகத்தையும் அவர்கள் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர். ஒன்றிய பாஜக அரசு ஒருபோதும் மாநில அந்தஸ்து தராது. மாநிலத்தில் பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு அமைதி திரும்பி விட்டதாக ஒன்றிய அரசு கூறுகிறது. அமைதியான ஒரு மாநிலத்தில் தேர்தலை நடத்த இந்த அளவுக்கு தயக்கம் காட்டுவது ஏன்? துணைநிலை ஆளுநர் துணையுடன் ஒன்றிய அரசு தனது ஆட்சியை ஜம்மு-காஷ்மீரில் நிலைநாட்டியுள்ளது என்பதுதான் உண்மை” என்று முன்னாள் முதல்வரும், ஸ்ரீநகர் எம்.பி.யுமான பரூக் அப்துல்லா விமர்சித்துள்ளார்.

இறைச்சி சாப்பிட்டு கோயிலுக்குள் சென்ற சி.டி. ரவி?

பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி இறைச்சி சாப்பிட்டு விட்டு கோவிலுக்குள் சென்று  சாமி தரிசனம் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக சி.டி. ரவி தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், “அசைவ உணவு சாப்பிடும் சாதியில் பிறந்தவன் நான், உத்தர கன்னடா சுற்றுப்பயணத்தின் போது பாஜக எம்எல்ஏ வீட்டில் இறைச்சி சாப்பிட்டது உண்மைதான்” என்றும், ஆனால், “ஆஞ்சநேயா சாமி கோவிலுக்குள், தான் செல்லவில்லை; கோவிலுக்கு வெளியே சாலையில் நின்றுதான் சாமி தரிசனம் செய்தேன்” என்றும் சமாளித்துள்ளார்.

15 சதவிகிதம் வரை குறைந்த அந்நிய நேரடி முதலீடு!

புதுதில்லி, பிப். 23 - நடப்பு 2022-23 நிதியாண்டின் ஏப்ரல்  முதல் டிசம்பர் வரையிலான காலக்கட் டத்தில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 15 சதவிகிதம் குறைந்து 36.75 பில்லியன் டாலராக உள்ளது என்று தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது. இதுவே முந்தைய 2021-22 நிதி யாண்டின் இதே ஏப்ரல் - டிசம்பர் இடை யிலான காலப்பகுதியில் அந்நிய நேரடி முதலீடு 43.17 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது என்றும் தொழில்  மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை கூறியுள்ளது. பங்கு வரவு, மறு முதலீட்டு வருவாய் மற்றும் இதர மூலதனம் ஆகியவற்றை உள்ளடக்கிய மொத்த அந்நிய நேரடி முதலீடுகள், நடப்பு நிதியாண்டின் ஒன்  பது மாதங்களில் 55.27 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைந்துள் ளது. இதுவும் முந்தைய 2021-22 நிதி யாண்டின் 9 மாத காலப் பகுதியில், 60.4 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்துள்ளது. 2022-23 நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் சிங்கப்பூர் நாடானது 13 பில்லியன் அமெ ரிக்க டாலர்களை  அந்நிய நேரடி முதலீடு களாக பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தங்கம் விலை  மீண்டும் குறைந்தது

சென்னை,பிப்.24- தங்கம் விலை கடந்த வாரம் ஏற்ற இறக்கமாக காணப்பட்டது.  கடந்த 19 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.42,320 விற்கப்பட்டது. 20 ஆம் தேதி  ரூ.42,240 ஆக குறைந்தது.   இந்த நிலையில் வியாழனன்று (பிப்.23) தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளதால் ரூ.41,960-க்கு  விற்ககப்பட்டது. கிராமுக்கு ரூ.30  குறைந்து ரூ.5,245க்கு விற்பனை யானது. இதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதேபோல், வெள்ளி கிராமுக்கு ரூ.50 காசுகள் குறைந்து ரூ.71.50-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார்  வெள்ளி ரூ.71,500க்கு விற்பனையா கிறது.

கட்டண உயர்வு:  கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

சென்னை, பிப். 23 – சேனல்களின் கட்டணத்தை உயர்த்துவதை எதிர்த்து வெள்ளி யன்று (பிப்.24) மாவட்ட ஆட்சியர்  அலுவலகங்கள் முன்பு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் நலசங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெறுகிறது. ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், கட்டண சேனல்களின் விலையை உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. இதனால் கேபிள் டிவி-யின் மாத கட்டணம் மார்ச் 1 ஆம் தேதியிலிருந்து 500 ரூபாய் வரை உயர்த்த வாய்ப்புள்ளது. எனவே, விலை ஏற்றத்தை கைவிட கோரி தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல  சங்கத்தின் சார்பில் இந்த ஆர்ப் பாட்டத்தை நடத்துவதாக சங்கத் தின் பொதுச் செயலாளர் எஸ்.வெள்ளைச்சாமி தெரிவித் துள்ளார்.

மார்ச் 8 ல் வெளியாகிறது தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை

சென்னை,பிப்.23- உலக மகளிர் தினமான மார்ச் 8 அன்று  தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையை வெளியிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.   தமிழ்நாட்டில் 3 கோடிக்கும் அதிகமாக பெண்கள் உள்ளனர். இவர்களுக்கு அதி காரம் அளிக்கும் வகையில், பாதுகாப்பான,  ஆரோக்கியமான மற்றும் தங்கள் குறிக் கோள்களை அடைவதற்கான சூழலை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், அரசியலமைப்பு சட்டத்தின்படி பெண்களுக்கான சம வாய்ப்பு, சம உரிமை,  பொருளாதார மேம்பாடு, திறன் வளர்த்தல்,  பாதுகாப்பான வாழ்வுரிமை, கண்ணியம் காத்தல் ஆகியவற்றை உறுதி செய்யவும், சமுதாயத்தில் மேலான நிலையை அடையவும், அரசியலில் வாய்ப்பு பெறவும் அவர்களை தயார்படுத்துவதற்கும், உரிமை பெற்றுத் தரவும், அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், கண்காணிக்கவும் மாநில மகளிர் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மாநில மகளிர் கொள்கைக்கான வரைவு கொள்கை கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு, கருத்து கோரப்பட்டது. பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில் தற்போது முழுமையான கொள்கை வெளி யிடப்பட உள்ளது. இந்த கொள்கையை மார்ச்  8-ம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு  முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.

தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு:  ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம்

சென்னை,பிப்.23- அதிமுக பொதுக்குழு தீர்மா னங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று ஓபிஎஸ் ஆதரவா ளர் வைத்தியலிங்கம் தெரிவித்தார். அதிமுக பொதுக்குழு செல்லும்  என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்வ தாக உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய் வோம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறு கையில், “பொதுக் குழு செல்லும் என்று தான் உச்ச நீதிமன்றம் கூறி யுள்ளது. தீர்மானங்கள் செல்லும் என்று கூறவில்லை. நாங்கள் தீர்மானங்களை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம். இது எங்க ளுக்கு பெரிய பாதிப்பு இல்லை. முழு தீர்ப்பை பார்த்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுப் போம்”  இவ்வாறு அவர் கூறினார்.  இறுதி வெற்றி: ஜெயக்குமார் அதிமுக தலைமை அலுவல கத்தில் முன்னாள் அமைச்சர் டி. ெஜயக்குமார் கூறுகையில், “பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பாண்டவர்களுக்குதான் எப்போதும் இறுதி வெற்றி. அரசியலில் ஓபிஎஸ்.ஸின் எதிர்காலம் ஜீரோதான்.  ஓபிஎஸ்., சசிகலா, டிடிவி தினகரன் சார்ந்தவர்களுக்கு அதிமுகவில் இடமில்லை. அவர்கள் தவிர மற்ற வர்கள் வந்தால் ஏற்றுக்கொள் வோம்”என்றார்.

ஈக்குவடார்: மக்கள்  கடும் எதிர்ப்பு

குயிட்டோ, பிப்.23- ஈக்குவடாரில் வலதுசாரி ஜனாதி பதி கில்லர்மோ லஸ்சோ மற்றும் அவ ரது தலைமையிலான நிர்வாகத்தின் செயல்பாடுகளில் பெரும் அதிருப்தி கொண்டவர்களாக அந்நாட்டு மக்கள் இருக்கிறார்கள். இதுகுறித்து நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, ஜனாதிபதி லஸ்சோ மீது கடும்  அதிருப்தியை மக்கள் வெளிப்படுத்தி யுள்ளனர். ஆய்வு நிறுவனமான பெர்ஃ பில்ஸ் டி ஒபினியன் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. 85 விழுக்காடு மக்கள் அவரது ஆட்சியை ஏற்றுக் கொள்ள வில்லை. பிப்ரவரி 11 முதல் 13 வரை யிலான காலகட்டத்தில் நடத்தப் பட்ட இந்த ஆய்வில் ஆயிரக்கணக் கான மக்களிடம் கருத்து கேட்டி ருக்கிறார்கள். கருத்து தெரிவித்தவர்களில் 53.43 விழுக்காடு மக்கள் லஸ்சோ வின் தலைமையிலான அரசு மோச மாக இருப்பதாகவும், 31.57 விழுக்கா ட்டினர் படுமோசமானது என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். வெறும் 12.53 விழுக்காடு மக்கள் மட்டுமே அரசின் செயல்பாடு கள் நன்றாக உள்ளன என்று கூறி யுள்ளனர். கடந்த ஆண்டில் இது போன்ற ஆய்வு மேற்கொள்ளப் பட்ட போது ஜனாதிபதிக்கு ஆதரவாக 31 விழுக்காட்டினர் கருத்து தெரி வித்திருந்தனர். அண்மையில் 8 அம்ச முன்மொழி வுகளை வைத்து பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அரசின் முன்மொழிவு களை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று ஊடகங்களில் எழுதப்பட் டது. ஆனால், அனைத்து முன்மொ ழிவுகளையும் மக்கள் நிராகரித்து விட்டனர். முன்மொழிவுகளைத் தாண்டி அரசின் மீதான கோபம்தான் வாக்குகளில் பிரதிபலித்துள்ளன. உள்ளாட்சித் தேர்தல்களில் இடது சாரிக்கட்சியினர் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.