திருவள்ளூர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக இருந்த 40 பேர் மீட்கப் பட்டு தமிழ்நாடு வாழ்வா தார இயக்கம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சித்துறை சார்பில் ரூ.4.05 லட்சம் செலவில் தனியாக செங்கல் சூளை வைத்து கொடுத்து முதலாளி ஆக்கினார் திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்.
பிரபல ஆன்லைன் ஓடிடி நிறுவனமான நெட் பிலிக்ஸ் கனடா, நியூசி லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய 4 நாடு களுக்கு பணம் செலுத்தும் கடவுச்சொல் பகிர்வு திட்டத்தை அறி வித்துள்ளது. வாடிக்கை யாளர்கள் தங்கள் சந்தாவை மேலும் ஒருவ ரோடு பகிர்ந்து கொள்ள விரும்பினால், கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடும்.
அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் பிரபல நிதி தொழில்நுட்ப நிறுவன மான அப்ரைம் (Affirm) 19 சதவீத ஊழியர் களை (500-க்கும் மேற் பட்டோர்- தோராயமாக) பணிநீக்கம் செய்துள்ளது. பணிநீக்கத்தால் வர்த்த கத்தில் அப்ரைம் நிறுவன த்தின் பங்குகள் சுமார் 18 சதவீதம் அளவில் சரிந்தன.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள தாய்மார்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப் படும் என மேகாலயா சட்டசபை தேர்தல் அறிக் கையில் காங்கிரஸ் வாக்கு றுதி அளித்துள்ளது.
ரஷ்யாவின் நொவர்சி பிஸ்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப் பில் எரிவாயு கசிவு கார ணமாக நிகழ்ந்த பயங்கர வெடி விபத்து காரண மாக 2 வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந் தனர்.
இலங்கையில் இருந்து பைபர் படகு மூலம் மண்டபம் நோக்கி கடத்தி கொண்டு வரப்பட்ட12 கிலோ தங்கக்கட்டிகளை ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட நிலையில், இந்திய கடற்படை 2 நாள்களாக போராடி மீட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப் பட்டனர்.
வரித்துறை அதிகாரியாக இருந்து நடிகையாக மாறிய கீர்த்தி வர்மாவி டம் ரூ.263 கோடி பண மோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகம் விசாரணை நடத்தியது.
சூரிய குடும்பத்தில் உள்ள சிறிய (குள்ள) கிரக மான குவாரை சுற்றி வளையம் இருப்பதை வானியலாளர்கள் கண்ட றிந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தில் அதிமுக பிரச்சாரக் கூட்ட த்தில் சிறுமி ஒருவரிடம் அதிமுக பிரமுகர் பாலி யல் அத்துமீறலில் ஈடு பட்டார். இந்த இழிசெய லை செய்த அதிமுக பிரமுகரை சிறுமியின் தாயார் ஆவேசமாக தாக்க முயன்றதால் அவர் கூட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.
உலகச் செய்திகள்
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையான உயர்ந்துள்ளன. ஸ்விடனில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஜனவரி மாதத்தில் விலைகள் அதிகரித்துள்ளன. ஒரே மாதத்தில் 1.4 விழுக்காடு அதிகரிப்பு இருந்திருக்கிறது. சர்க்கரை உள்ளிட்ட சில குறிப்பான பொருட் களுக்கு பெரும் அளவில் உயர்வு இருந்துள்ளது. திடீர் உயர்வு பெரும்பாலான மக்களுக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெறும் வரை, ஜனாதிபதிப் பொறுப்பில் தொடரப் போவதாக டினா போலுவார்ட்டே அறிவித்திருக்கிறார். 2023இல் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றால், பிப்.10 ஆம் தேதிக்குள் அறிவித்தாக வேண்டும். பிப்.10 ஆம் தேதிக்குள் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஒப்புதல் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் ஜனாதிபதி பொறுப்பில் தான் தொடரப் போவதாக போலுவார்ட்டே கூறியுள்ளார்.
ஐரோப்பிய யூனியனின் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாக உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸ் நகரில் நடக்கவிருக்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் அவர், போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்களை வழங்குமாறு அழுத்தம் கொடுக்கத் திட்டமிட்டுள் ளார். கடந்த சில நாட்களாக திடீர் பயணமாக பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் அவர் சென்றிருந்தார். ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் காட்டிக் கொள்ளவே அவர் கலந்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது.