states

“சிறுபான்மையினர் பாதுகாப்போடு வாழும் மாநிலம் தமிழகம்”

சென்னை,டிச.17- தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் நாளையொட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஞாயிறன்று (டிச.18) தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் நடத்தும் விழாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளளார்.  இது தொடர்பாக அவர் அனுப்பி யுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:- ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கல்வி, பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சிக்குச் சிறுபான்மையினர் ஆற்றும் பங்களிப்பு மகத்தானது. தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கிய உலகுக்கும், தமிழர்களுக்கும், திரா விடப் பண்பாட்டுக்கும் அவர்கள் ஆற்றி யுள்ள தொண்டுக்கு  நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.  மதம், சாதி ஆகிய எல்லைகளைக்  கடந்து தமிழகத்தில் வாழும் அனை வரும் தமிழர்களாய் ஒன்றிணைந்து தமிழ்ச் சமூகமாக எழுந்து நிற்க வேண்டும் என்பதே திமுக ஆட்சியின் உயரிய நோக்கம். மதம், சாதி, மொழி என்ற அடிப்படையில் மக்களைப்  பிரிக்காமல் அனைவரும் அனைத்து உரிமைகளும் பெற்று, மனித மாண்புகளுடன் சமூக நீதி பெற்ற சமூக மாக வாழ எனது அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

இன்றைய இந்தியாவில் சிறு பான்மையினர் எவ்விதமான அச்சுறுத் தல்களுக்கும் உட்படுத்தப்படாமல் தனிமனித உரிமைகளுக்கான பாதுகாப்போடு வாழ்கின்ற முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது என்பது நமக்கிருக்கும் சிறப்பான பெருமையாகும்.  இந்த நேரத்தில், தமிழ்நாட்டில் வாழும் மத மற்றும் மொழிச் சிறு பான்மை மக்களுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுக ளையும் தெரிவித்துக் கொள்கி றேன். சிறுபான்மை மக்கள் அனைவ ருக்கும் எனது அன்பையும் நல்வாழ்த்து களையும் தெரிவியுங்கள். அவர்களது நல்ல முயற்சிகள் அனைத்துக்கும் எனது அரசு துணைநிற்கும். தமிழ கத்தை இந்தியாவின் முதல் மாநில மாக மாற்றுவதற்கு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்து ழைப்பு கொடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித் திருக்கிறார்.