states

தமிழக நிதியமைச்சர் விமர்சனம் ஜிஎஸ்டி கவுன்சில் ஒரு “ரப்பர் ஸ்டாம்ப்”

சென்னை, டிச.16- சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில்  ‘ரப்பர் ஸ்டாம்ப்’ ஆக மாறிவருகிறது தமிழக நிதியமைச்சர்  பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார். இந்திய பட்டயக் கணக்காளர்கள் கருத்தரங்கில் உரையாற்றிய அவர், ஜிஎஸ்டி அமல்படுத்துவதில் பலவீனங்கள் மட்டுமல்ல; குழப்பங்களும் உள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது. குறிப்பாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஜிஎஸ்டி கூட்டங்கள் நடத்த வேண்டும், ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் அப்படி நடைபெறவில்லை என்றார். 30-க்கும் மேற்பட்ட மாநிலங்களின் அமைச்சர்கள், நூற்றுக்கணக்கான அரசு அதிகாரிகள் பங்கேற்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரல்கள் முன்கூட்டியே வழங்கப்படுவதில்லை. இதனால் மாநி லங்கள் தங்களை தயார்ப்படுத்திக் கொள்வதற்கும், அறிவு  சார் விவாதங்கள் நடத்துவதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. (ஜிஎஸ்டி) கவுன்சில்  ‘ரப்பர் ஸ்டாம்ப்’  ஆக மாறிவருகிறது என்றும் கூறினார்.  ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) எவ்வாறு கணக்கிடப்படுகிறது. அது மாநிலங்களுடன் எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பதை நாட்டில் யாராலும் புரிந்து கொள்ள முடியாது. இந்த பிளாக்பாக்ஸ் அமைப்பு  (கருப்புப் பெட்டி கட்டமைப்பு)  நம்பிக்கையின்மைக்கே வழிவகுக்கிறது, ஏனெனில்  பிளாக் பாக்ஸ் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது என்றும் அவர் கூறினார். 48-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டிசம்பர் 17(இன்று) நடைபெறும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.